இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உறவுக்கு உதவியே ரோஜா செடி - நூல் விமர்சனம்

படம்
மேலூர் மு.வாசுகி அவர்களின் எழுத்தில் உருவான முதல் சிறுகதைத்தொகுப்பு "உறவுக்கு உதவிய ரோஜா சேடி". 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் எழுத்துலகில் பெண் படைப்பாளர்கள் எண்ணிக்கை இன்றும் ஒப்பிட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் படைப்பாளர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.  இவர்களின் தன் எழுச்சியான படைப்பாக்கங்கள் சமூகத்திற்கு நல் விளைவுகளையும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பையும் தருகிறது.  பென் படைப்பாளர்களை கொண்டாடுவதும் அவர்களின் படைப்புகளை தொடர்ந்து பரப்புவதும்  சமூகத்தின் கடமையாகும். தனது நான்கு நூல்களை கவிதை நூல்களாக படைத்தளித்த கவிஞர் வாசுகி தனது ஐந்தாவது நூலை சிறுகதைத் தொகுப்பாகத் தந்திருக்கிறார். நம் அருகில் நடக்கும் நிகழ்வுகளை, பார்த்த சம்பவங்களை தனது சிறுகதைகளில் படிப்பினையாக மாற்றித் தந்திருக்கிறார்.  நூலின் தலைப்புக்கு உதவிய சிறுகதை சமூக மாற்றத்திற்கான விதையாக அமைகிறது.  வணிகமாகிப்போன வாழ்வியல் சூழலில் உறவுகளை கூவி அழைக்கும் காலத்தில் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள பசுமைய

தூக்குக் கயிற்றின் மரணம்

படம்
  1996 இல் முதல் பதிப்பு கண்டு 2023 இல் மூன்றாம் பதிப்பாக ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் "தூக்கு கயிற்றின் மரணம்" பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் வடித்திருக்கிறார் அன்புத் தோழர் எஸ் கவிவர்மன்.  மூன்று பதிப்புகள் கண்டும் இப்பொழுதுதான் இந்த நூலை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.  அன்புத் தோழரின் கரங்களிலிருந்து நூலைப் பெற்று படித்து முடித்தேன்.    சமகால இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய வரலாற்று நூல்.  பகத்சிங்கை படி எடுக்க இந்த புத்தகத்தை படித்து விடுங்கள்.   ஈகம் மனித வடிவில் வாழ்ந்த வரலாற்றை வாசிப்பவர் மனதுக்குள் மறு பதிப்பு செய்து விடும் புத்தகம்.   "இடும்பைக்கு இடுப்பைப் படுப்பர்..." வள்ளுவர் வார்த்தெடுத்த வரிகளை வாழ்வியலாகக் கொண்டவனின் வரலாற்றை "தூக்குக் கயிற்றின் மரணம்" என்று தலைப்பிட்டு தந்திருக்கிறார் ஆசிரியர். இருட்டுக்குள் கிடந்த இந்தியாவில் செம்பூக்கள் மலர வைக்க மாவீரன் செய்த ஈகம்,  ஈர உள்ளம் கொண்டவர்களை ஈகம் செய்யத் தூண்டும். "அவனைப் பள்ளிக்கனுப்பிய பாலப் பருவம் தாயின் நெஞ்சில் தைத்தது"  வரிகள் வாசிப்பவர் நெஞ்சங்களையும் தைத்து வ

கயிறு

படம்
தோழர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நூல் வரிசை படைப்புகளுள் ஒன்று "கயிறு" சிறு நூல். பதின் பருவப் பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்க வேண்டிய மிக அருமையான நூல். சமகால சிக்கல்களை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் அமைத்திருக்கிறார்  ஆசிரியர் சரவணன். எளிய நடையில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இந்த நூல் வெளி வந்திருக்கிறது.  பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. பழனிக்குச் சென்று வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கொடுக்கும் சாமி கயிறு, இன்று சாதி கயிறாக மாறியுள்ளதை பளிச்சென்று விளக்கியிருக்கிறார். எந்தவித சமூகப் பொறுப்பும் இல்லாதவன்,  படிக்கிற,  பரீட்சைக்குப் போகிற பிள்ளைக்கு ரெண்டு ரூபாய்க்கு பேனா வாங்கி கொடுக்காதவன் எல்லாம் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை மறித்து மயக்கும்  மஞ்சள், சிகப்பு, பச்சை என  கைகளில் கட்டிக் கொள்ள விதவிதமான கயிறுகளை மட்டும் இனாமாக கொடுக்கிறானே எப்படி?  மதவாத செயல்களைச் செய்ய அந்த பொறுப்பற்றவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறார் ஆசிரியர்.    மதவெறி, சாதி வெறி பெருமித உணர்வாய்  மூளைக்குள் ஏ

எளிமையான உடற்பயிற்சி வலிமையான உடல்! - வழிகாட்டுகிறார் தோப்புக்கரணபயிற்சியாளர் மணிகண்டன்

படம்
கோவில் வாசல், கூட்ட அரங்கம், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து தனது பயிற்சிக் களத்தை விரிவுபடுத்தி வருகிறார் ஜெ. மணிகண்டன்.  கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பேராவூரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் உடல் நலம் பேணும் மிகப் பழமையான கலையை கற்றுக் கொடுத்து வருகிறார் மணிகண்டன். பள்ளிகளில் அதிகமாக குறும்புத்தனம் செய்யும் மாணவர்களையும் பாடங்களை சரிவர கவனிக்காத மாணவர்களையும் தண்டிப்பதற்காக ஆசிரியர்கள் கைக்கொண்ட தமிழர்களின் மிகப் பழமையான முறைதான் தோப்புக்கரணம். உக்கி போடுதல் என்றும் அழைப்பர்.  நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் தரை விரிப்பின் மீது நேராக நின்று கொண்டு இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு வலது காதை பிடித்துக் கொள்வது, வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு இடது காதை பிடித்துக் கொள்வது பிறகு பார்வையை நேராக வைத்துக் கொண்டு உட்கார்ந்து எழுதல் இதற்குப் பெயர்தான் தோப்புக்கரணம் என்று அழைப்பர்.   இந்த எளிமையான உடற்பயிற்சியைதான் மாணவர்களை தண்டிக்க பயன்படுத்தினார்கள் ஆசிரியர்கள்.  இந்த ப