இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக்கு நிலம் வாங்க பெருகும் ஆதரவு!

படம்
பேராவூரணி - பொன்னாங்கண்ணிக்காடு கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுமார் 400 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளிக்குப் போதுமான இடவசதி இல்லை. இதனால் பள்ளிக்கு அருகில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான ஆறு சென்ட் நிலத்தை பள்ளிக்காக வாங்கிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை பலமுறை நாம் இங்கு பதிவிட்டு இருக்கிறோம். கொடை உள்ளம் கொண்ட பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இதுவரை புரவலர்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் நாலரை லட்சம் நிதி இரண்டு தவணைகளாக நில உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கொடை வழங்கும் நோக்கத்தோடு கடந்த ஞாயிறன்று புரவலர்கள் பலரும் பள்ளியில் கூடி ஒன்றரை லட்சம் நிதியை பள்ளிக்கு வழங்கினர். கொடை கொடுத்த நல்லுள்ளங்கள் மருத்துவர்கள் துரை. நீலகண்டன், விவேகானந்தன், பிரேமலதா, ரஞ்சித், பொறியாளர்கள் ஏசிசி ராஜா, துரையரசன், ந.சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், திராவிடர் கழக பொறுப்பாளர் வை.சிதம்பரம், தொழிலதிபர் லண்டன் ஸ்டீல்ஸ் கனி, செந்தில்குமார், சாகுல் ஹமீது ஆகியோருக்கு பள்ளிப் புரவலர் அரிமா எஸ் கந்தப்பன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தா

மொழிப்போர் மறவர்களை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்வோம்.

படம்
விடுதலை அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ஒன்றிய அரசிடம் தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்தி மொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு வழங்கப்படாமல் தமிழ் மொழி பேசுவோர் ஒன்றிய அரசால் இரண்டாம் தர குடிமக்களாவே நடத்தப்படுகிறார்கள். இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டும் இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கென இருக்கைகள் அமைக்கப்படவில்லை. சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்படும் ஒன்றிய அரசு நிதி தமிழ் மொழிக்கு கிடைப்பதில்லை. தமிழ் மொழியின் செவ்வியல் தன்மை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. மருத்துவம் அறிவியல் என பல் திறன் அறிவு களஞ்சியமாக திகழும் தமிழை உலகம் முழுவதும் உள்ள மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும் இந்திய ஒன்றிய அரசு தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க மறுக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு கழகம் போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களில் திட்ட விளக்கங்கள் எதுவும் தமிழ் மொழியில் கொடுக்கப்படுவதில்லை. மொழிப்போர் வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் உயர்

பேராவூரணி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது! தொடர் ஓட்டம்

படம்
பேராவூரணியில் "ழ" பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் "உடல்நலம் மனநலம் காப்போம்" என்ற விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு நேற்று 22 .1.2023 ஞாயிறு காலை 7 மணிக்கு தொடர் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடர் ஓட்டம் தொடங்கும் என்று அறிவித்திருந்தாலும் வீடுகளில் 4 மணிக்கே எழுந்து பெற்றோர்களை துரிதப்படுத்தினர் இளஞ்சிரார்கள். சுமார் 1500 மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஒருசேர கூடியதில் பேராவூரணி பெரு நகரமே ஸ்தம்பித்து போனது. எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் கூடிவிட விழா குழுவினர் மிகவும் திறமையாக நிகழ்வை நடத்தி முடித்தனர். போட்டியாக அல்லாமல் இலக்கு நோக்கிய பயணத்தை எட்டி விட வேண்டும் என்ற சிந்தனையை மாணவர்களிடம் இந்தத் தொடர் ஓட்ட பயணங்கள் ஏற்படுத்தி இருக்கிறது. பேராவூரணியில் தொடர் ஓட்டம் என்பது இது முதல் முறை. பேராவூரணி வட்டாட்சியர் வளாக திடலில் ஒன்று கூடிய மாணவர்கள் அங்கிருந்து வயதுக்கு ஏற்ற இலக்குகளை நோக்கி ஓட்டத்துடன் பயணித்தனர். மூன்று வயது சிறுவன் முதல் 70 வயது பெரியவர் வரை இந்தத் தொடர் ஓட்ட பயணத்தில் கலந்து கொண்டனர். குழந்தைகளோடு பெற்றோர்களும் பயணித்தது பார்ப்பவர

பேராவூரணியின் வரலாற்றுப் பெருமைகளை பதிவு செய்யும் ஒளிப்படக் கலைஞர் பாரதி ந. அமரேந்திரன்

படம்
  இரண்டாம் உலகப் போரின் உக்கிரத்தை ஒர் ஒளிப்படம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. போரின் பேரழிவு அத்தோடு நிறுத்தப்பட்டது. வரலாற்று நாயகர்களின் வெவ்வேறு முக பாவங்களை ஒளிப்பட உளவியல் காட்டிக் கொடுத்திருக்கிறது. இன்றளவும் விருந்தினர்களிடம் வீட்டில் நடந்த விழாக்களின் ஒளிப்படத் தொகுப்பை பெருமையாகக் காட்டி மகிழ்கிறோம். காட்சிப்படுத்தி இருக்கும் ஒளிப்படங்கள் உள்ளுக்குள் பசுமையாக படர்வதை உணர்ந்திருக்கிறோம். பகையாகி போன பங்காளிகள் என்றோ நடந்த விழாக்களில் ஒன்றாக இருந்ததை ஒளிப்படங்களில் கண்டு உருகிப் போவதை பார்த்திருக்கிறோம். ஒளிப்படங்களின் காட்சிகள் வேறுபட்ட உறவுகளிடம் ஒற்றுமையை உருவாக்கி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேராவூரணியின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன நிறுவனம்தான் பாரதி ஸ்டுடியோ. தந்தை பாரதி வை. நடராஜன் நடத்தி வந்த பணியை 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து வருகிறார் அவரின் தனையன் பாரதி ந.அமரேந்திரன். பேராவூரணி மக்களின் பெருமைமிகு நிகழ்வுகள் அத்தனையும் இவரின் பேழையில். கோவில் விழாக்கள் தொடங்கி பேராவூரணி மண்ணைத் தொட்டுப் பார்க்கும் தமிழ்நாட்

பேராவூரணியில் பாரதி சிலை திறப்பு விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேருரை.

படம்
பேராவூரணியில் பாரதி கலை இலக்கிய பேரவை சார்பில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மகாகவி பாரதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மகாகவி பாரதியாரின் சிலையை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அவர் தனது உரையில்... "பாரதி சிறுவயதிலேயே கவிப்பனையும் ஆற்றலை பெற்று விட்டான்.   தான் சிறு வயது முதல் கற்றதை எல்லாம் எழுத்துக்களாக பதிவு செய்து வைத்திருக்கிறான்.  பெண் அடிமைத்தனமும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் எட்டயபுரம் என்ற கிராமத்தில் பிறந்து எளிய மக்களோடு பழகி வளர்கிறான். மன்னர்களையும் ஜமீன்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த காலத்தில் நாட்டையும், சமூகத்தைப் பற்றியும் பாடுகிறான். சுயசாதி பழக்கங்களை கேள்விக்குட்படுத்துகிறான்.   பார்ப்பனர்கள் அணியும் பூணூலை மற்றவர்கள் ஏன் அணியவில்லை என்று கேள்வி கேட்கிறான்.   பார்ப்பனர்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் பூணூல் சடங்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நடத்தி வைக்கிறான்.  உறவுகளால் வெறுக்கப்பட்ட பாரதி காசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான்.   காசிக்குச் சென்ற பாரதி குல வழக்கத்திற்கு மாறாக பெரிய மீசை வைத்துக்

"தமிழ்நாடு" ஆளுநர் ஆர் என் ரவி

படம்
கட்சிகள், கொள்கை மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கடந்து ஆளுநரின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் திமுகவுக்கு எதிர் நிலையில் இருக்கக்கூடிய கட்சிகள் கூட ஆளுநரின் செயல்பாட்டை விமர்சனம் செய்து வருகிறார்கள். தமிழகம், சனாதனம், புதிய கல்விக் கொள்கை இவற்றையெல்லாம் ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டில் நிலை நிறுத்த விரும்பினால் அது தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்களின் சமூக நீதி கருத்துக்களையும், சாவை துச்சம் என நினைத்து உயிர் ஈகம் செய்த சங்கரலிங்கனார் போற்றிய, பேரறிஞர் அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரையும் கொண்டாடுபவர்கள். மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கிப் போடும் ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விரோதமானது. தமிழ்நாட்டின் சமூக நீதி கருத்துக்களை மனுநீதியால் முடக்கிப் போட முடியாது. சமூக நீதி, மதச்சார்பின்மை என்பதெல்லாம் தமிழர்களின் சிந்தனையோடு கலந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த சிந்தனை. "தமிழ்நாடு" என்ற பழம்பெருமை வாய்ந்த பெயர் இந

'ஆசிரியர்கள் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பினால் நல்ல மருத்துவராய் சேவை செய்து வருகிறேன்' மருத்துவர் சிவபாலசேகரன் உரை.

படம்
எவரெஸ்ட் மவுண்ட் ட்ரஸ்ட் அமைப்பின் 11 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பேராவூரணி எஸ் என் வி விழா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மருத்துவர் சிவபாலசேகரன் தனது உரையில், " அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் இந்த அறக்கட்டளையின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அரசுப் பள்ளியில் படித்துதான் நான் இன்று மருத்துவராக சேவை செய்து வருகிறேன். எனது வாழ்வில் ஒளி ஏற்றியவர் தற்பொழுது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஐயா மனோகரன் அவர்கள். ஐயாவுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த மேடையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளால் தான் என்னால் ஒரு நல்ல மருத்துவராக என்னை உயர்த்திக்கொள்ள முடிந்தது. ஆசிரியர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மாணவர்களை மேலான நிலைக்கு இட்டுச் செல்லும். நல்ல ஆசிரியர்கள் அவர்களையும் அறியாமல் தங்களது செயல்களால் மாணவர்களை வழிநடத்திக் கொண்டே வருவார்கள். அப்படி ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்ட மாணவர்களில் ஒருவன

பள்ளிக்கூடத்தை பாதுகாக்க... களத்தில் பொன்னாங்கண்ணிக்காடு நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்

படம்
பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி க்கு இடம் வாங்கிட கொடை கொடுத்தது நியூ ஃபிரண்ட்ஸ் குரூப். பேராவூரணி பெரியகுளம் தூர்வார கைஃபா அமைப்பு களம் இறங்கும்போது முதன்முதலாய் தோள் கொடுத்து துணை நின்றது நியூ ஃபிரண்ட்ஸ் குரூப். செயல்... செயல்... செயல்... ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் அமைப்பு. பொன்னாங்கண்ணிக்காடு புதிய தலைமுறை பிள்ளைகள் எல்லாம் நியூ ஃபிரண்ட்ஸ் குரூப்பில் இணைந்து கொள்வதை பெருமையாக கருதுகின்றனர் அப்பகுதி பெற்றோர்கள். தலைமுறை தாண்டி தகுதியானவர்கள் இணைந்து இந்த அமைப்பை கட்டி எழுப்பி வருகிறார்கள். ஓர் ஊருக்குள் இளவட்ட பிள்ளைகள் இணைந்து சுற்றினால் என்ன செய்வார்கள் என்ற இலக்கணம் ஒன்றை வைத்திருக்கிறது இந்த சமூகம். அந்த இலக்கணத்தை மாற்றி இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த இளைஞர் நற்பணி மன்றம் துணையாக நிற்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் தலைமைத்துவம் பெற்று திகழ்கிறார்கள். ஊர் விழாக்களை நடத்த ஒன்று கூடுகிறார்கள். உறவோடு சேர்ந்து நிற்கிறார்கள். பண்பாட்டை பாதுகாக்க பொங்கல் விழாவை பெருமையோடு நடத்துகிறார்கள். இப்போது பள்ளிக்கு இடம் வாங்க களத்தில் நிற்கிறார்கள்.

நாட்டாணிகோட்டை மாணவி மாநில அளவிலான ஓவிய போட்டியில் சாதனை

படம்
தமிழ்நாடு அரசு சார்பில் நடுநிலை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலைப் போட்டிகளை கலை விழா என்ற பெயரில் நடத்தியது. மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஒரு சில பள்ளிகள் கலைத்திறன்களில் ஆர்வம் உள்ள மாணவர்களை சிறப்பாக தயார்படுத்தியது. ஒரு சில பள்ளிகள் இந்தக் கலைத்திறன் போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வதை மிகவும் சுமையாக கருதியது. தேர்வும் மதிப்பெண்ணும் மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றும் முயற்சியாக முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த செயல்பாட்டை கொண்டாடினர். பேராவூரணி நாட்டாணிகோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிவானி. இவர் மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்திருக்கிறார். குட்டிக் குழந்தையாக இருக்கும் பொழுதே கிடைக்கும் தாள்களில் எல்லாம் பென்சிலை கொண்டு விதவிதமாக கிறுக்கல்களை செய்து தனது தாயிடம் "நன்றாக இருக்கிறதா?" என்று கேட்பாராம் சிவானி. இப்போது வீடெல்லாம் வரைந்து வைத்திருக்கிறார். மழலை வயது தொடங்கி ஓவியத்தில் நாட்டம் கொண்ட சிவானியை பள்ளி ஆசிரியர்களும் பெற்