இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"கல்வி மற்றும் வேலை உரிமை தாய்மொழியாம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்" பன்னாட்டு தாய்மொழி நாள் விழாவில் சின்னப்பத்தமிழர் பேச்சு.

படம்
பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி. சின்னப்பத்தமிழர், "தற்பொழுது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே நூறு விழுக்காடு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் திட்டங்களின் பெயர்களை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.  சிறப்

திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி கூடத்தின் வெற்றியாளர்கள் பட்டியல் தொடங்கியது!

படம்
பேராவூரணியில் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. பேராவூரணி வட்டாட்சியர் த. சுகுமார் அவர்களின் முன்னெடுப்பில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் அவர்களின் ஆதரவோடு நகர வர்த்தகக் கழக கட்டுப்பாட்டு குழுவினரின் ஒத்துழைப்பினால் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். நகர வர்த்தகர் கழக கட்டடத்தில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பெரும் முயற்சியால் நீதிமன்ற பணியாளர் தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கிறார் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சுபா. பயிற்சி காலங்களில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பயிற்சி மையம் வழங்கும் பரிசினை தொடர்ந்து பெற்று வருபவர் சுபா. பேராவூரணி பயிற்சிக் கூடத்தின் முதல் வெற்றியாளராக தனது பெயரை பதிவு செய்து பயிற்சிக்கு உயிரூட்டி இருக்கிறார் ஆவுடையார்கோவில் சுபா. இன்று 10.02.2023 காலை அறந்தாங்கி நீதிமன்றத்தில் தனது அரசுப் பணியை தொடங்குகிறார். ஏழைகளுக்கும

பொன்னாங்கண்ணிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகள் சாதனை

படம்
தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான வளைகோல் பந்து (ஹாக்கி) விளையாட்டில் பொன்னாங்கண்ணிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 16 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான இந்தப் போட்டி கடந்த 07.02.2023 அன்று தஞ்சாவூர் சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தங்களை விட வயதில் மூத்த உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் விளையாட்டு மாணவிகளோடு விளையாடி நம் பகுதி நடுநிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கான பரிசுத்தொகை ரூபாய் 18 ஆயிரத்தை வென்று இருக்கிறார்கள். கிராமப் பகுதியில், விளையாட்டு திடல் இல்லாத ஒரு பள்ளியில் இருந்து மாணவர்களை தகுதிப்படுத்தி போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் இப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் புகழ் கௌரி. மிகுந்த ஈடுபட்டுடன் மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து வரும் ஆசிரியர் புகழ் கௌரி அவர்களுக்கு மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். போட்டிகளில் பங்கேற்கச் சென்ற மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மெய்ச்சுடர் வாழ்த்துக்களை தெரி

இதைக் கேட்பாரில்லையா? - வாசல்களை அடைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் ஒன்றிய ரயில்வே துறையின் அடாவடித்தனம்! கொதிக்கும் மக்கள்!

படம்
  அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை வழித்தடங்களில் ரயில்வே சாலைக்கு குறுக்கே கிராமங்களுக்குள் செல்லும் பாதைகளில் எல்லாம் பள்ளங்களைத் தோண்டி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் தென்னக ரயில்வேயின் அடாவடித்தனத்தை நம் தளத்தில் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அத்தனை கீழ் பாலங்களும் கிராமத்தின் வாசல்களை அடைக்கும் பள்ளங்களாக, பாதையை மறிக்கும் படுகுழிகளாக உருவெடுத்து நிற்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட(?) கீழ் பாலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிறகு அடுத்தடுத்த பகுதிகளுக்கு இதை அனுமதிக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். மக்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து ஒன்றிய ரயில்வே துறை, கீழ் பாலங்கள் அமைப்பதாக கூறி கிராமங்களுக்குள் செல்லும் பாதைகளை பள்ளங்களாக மாற்றி வருகிறது. மக்களிடம் போராட்ட எழுச்சி ஏற்படும்பொழுதெல்லாம் வருவாய்த் துறையால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் வகையில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று போராடும் மக்களை வெவ்வேறு ஊர்களுக்கு அலைக்கழித்து பேச்சுவார்த்தை என்ற பெயரில

அதானி ஆதரவோடு நடக்கும் விழாவில் விருது வாங்க மறுப்பு - தோழர் சுகிர்தராணிக்கு பெருகும் ஆதரவு

படம்
"நான் பேசும் அரசியலுக்கும் கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பில் இருந்தோ நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே இந்த தேவி விருது பெறுவதை மறுக்கிறேன்..." இப்படி கூறி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்கும் தேவி விருதை மறுத்திருக்கிறார் தோழர் சுகிர்தராணி. விருதுகளுக்காக வளைந்து நெளிந்து குனிந்து போகும் கவிஞர்களுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கிறார் கவிஞர் சுகிர்தராணி. சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்க்கும் அரசு ஊழியர்களுக்கிடையே அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு தனது கனல் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழங்குபவர் தோழர் சுகிர்தராணி. வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரணாக நின்று ஆளுமை செலுத்தி வருபவர். தனது எண்ணம் சொல் செயல் அனைத்திலும் ஒரு சேர பயணிக்கும் கவிஞர் சுகிர்தராணி அவர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி இருக்கிறது. உண்மையில் இவரின் செயல் போற்றத்தக்கது. தங்களது உண்மை முகங்களை மறைத்துக் கொண்டு முற்போக்கு முகத்தை அடையாளமாக காட்டும் சக்திகளுக்

தன்னிகரற்ற தமிழை தரணி போற்றச் செய்தவனின் புகழைப் போற்றுவோம்!

படம்
பிறப்பிடம் தெரியாமல் தடுமாறி நின்ற, உலக மக்கள் வழங்கும் சொற்களுக்கு எல்லாம் தாய்மையை அடையாளம் காட்டியவர். உலக மொழிகளில் வழங்கப்பட்டு வரும் பொருள் (meaning) அறியா சொற்களுக்கு வேரினை அறிமுகம் செய்து வைத்தவர். உலகத்தின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர். தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய், ஆரிய மொழிகளுக்கு மூலம் என்ற தனது ஆய்வு முடிவுகளை ஆதாரங்களுடன் உலகுக்கு பறை சாற்றியவர். உயிர் உருக இவர் செய்த வேர்ச்சொல்லாய்வு, "உலக மொழிகளின் தாய் - தமிழ்" என்பதை உலகறிய செய்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் என 17 மொழிகளின் இலக்கணங்களை கற்றறிந்த ஒரே இந்திய மொழியியல் அறிஞராக போற்றப்படுபவர். தமிழ் மொழி சொற்பிறப்பியல் அகர முதலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். 40க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளை கற்று சிறப்பாக சொல்லாராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்று இவரை நவீன மொழியியல் அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்தான் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் ஞானமுத்தன்- பரிபூரணம் அம்மையார் இணையருக்கு பத்தாவது மகனாக பிறந

குறள் நெறி பரப்பும் மாண்புமிகு மருத்துவருக்கு திருக்குறள் பேரவை கூட்டத்தில் பாராட்டு.

படம்
பேராவூரணி சேது சாலையில் தர்ஷணா மருத்துவமனை என்ற பெயரில் பிணியோடு வரும் மக்களுக்கு அரணாக இருந்து சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் துரை.நீலகண்டன். எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை மருத்துவரான இவர் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை வடித்து திருக்குறள் நெறி பரப்பும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் -என்ற திருக்குறளுக்கு பொருளாக தனது மருத்துவமனை வளாகத்தை மாற்றி வருகிறார். வேதனையோடு வரும் நோயாளிகளுக்கு நோய்க்கான வேரினை கண்டறிந்து அறிவுறுத்துகிறார். முழுமையான விழிப்புணர்வு மட்டுமே நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று வள்ளுவர் வழி நின்று வகுப்பு எடுக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் சொற்களை காது கொடுத்து கேட்கிறார். உரிய பதில் மொழிகளை கொடுக்கிறார். மதுப்பழக்கத்திற்கு எதிராக மருத்துவர் செய்து வரும் பரப்புரை போற்றுதலுக்குரியது. குடியின் கேடு குறித்து குடிப்பழக்கம் கொண்டவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் கலந்துரையாடுகிறார். விபத்துகளில் பெரும் பங்கு வகிப்பது மதுப்பழக்கம் தான் என்று தமிழகத்தின் வெகு மக்கள

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பத்தில் மும்மொழி கட்டாயம்! 2016 மார்ச்சுக்கு பிறகு பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்...

படம்
  பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கும் இணைய வழி விண்ணப்பம் இந்திய அஞ்சல் துறையால் பெறப்பட்டு வருகிறது.  மார்ச் 2016-க்கு பிறகு தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர விருப்பமொழி பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை அஞ்சல் துறையின் இணையவழி விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மும்மொழி பாடத்திட்டம் நடைமுறையில் இல்லாத தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்து அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் ஏன் விருப்பமொழி மதிப்பெண்ணையும் கேட்டு கட்டாயப் படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் 2016க்கு பிறகு தமிழ்நாடு அரசு வழங்கிய மதிப்பெண் பட்டியலிலும் விருப்பமொழி என்பது சேர்க்கப்பட்டு அதற்கு நேரே மதிப்பெண் வழங்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.   மும்மொழிப் பாடம் நடைமுறையில் இல்லாதபோது தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் விருப்பமொழி என்கிற வரியை ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியும் தற்பொழுது முற்போக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருபுறம் இரு

ஆலய வாசலில் ஆபாச அர்ச்சனை! சனாதனத்தின் சாக்கடை சிந்தனை! தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடு!

படம்
அன்புமிக்க தமிழ் உறவுகளே! ஒரு பக்கம் பெரியார் மண் என்றும், திருக்குறள் நெறி பரப்பும் தமிழ்நாடு என்றும் திராவிட மாடல் என்றும் கூறிக் கொள்கிறோம். ஆனால் இதற்கு நேர் எதிராக சமூக குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டும் காணாமல் கடந்து செல்வது என்ன நியாயம்? சமீபத்தில் சமூக ஊடகங்களில், கேட்க சகிக்காத வார்த்தைகளோடு சாதி வெறிபிடித்து பேசும் ஒருவனின் காணொளி மனதை பதை பதைக்க செய்கிறது. சாதி வன்மத்திற்கு சான்றாக ஊடகமெங்கும் பரவி வருகிறது. பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஒரு இளைஞர் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்பதற்காக வெறிபிடித்த ஒருவன் ஆபாச வார்த்தைகளால் அந்த இளைஞரை தாக்கும் காட்சிகள் இந்த காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரர் கோவிலுக்குள் நுழைந்து விட்டார் என்பதற்காக ஆலய வாசலில் ஆபாச வார்த்தைகளால் பெரும் கூச்சலிடும் இவன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இவனுக்கு ஆதரவாக கூட்டத்தில் நின்று கொண்டு கூச்சலிட்ட நெற்றி நிறைய திருநீறு பூசி நின்றவன் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில்