இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? - விபரீத வீர விளையாட்டு

பழக்கமெல்லாம் பண்பாடாகிவிடுமா? -  விபரீத வீர விளையாட்டு          தமிழர்கள் தங்களின் பண்பாடாக போற்றியது, அவர்களின் பொருள் செறிந்த (meaningful) வாழ்வை மட்டும்தான். பொருளற்ற சொற்களைக் கூட தமிழ் தன்னகத்தே வைத்திருக்காது. அறம் சார்ந்த தனது வாழ்வின் மூலம் உலகத்துக்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம் தமிழ் இனம்.   "அரிச்சந்திரா" நாடகம் மூலம் அர்த்தமற்ற சத்தியம் பரப்பப்பட்ட காலத்திற்கும் முன்பாகவே"பொய்மையும் வாய்மை.... நன்மை பயக்கும் எனின்" என்று அறம் போற்றிய "குறள்" கூறிய இனம் தமிழினம். புத்தருக்கு முன்பே காளையனையும் (ஆதிதீர்த்தங்கரர்), கபிலரையும் (ஆசீவக தத்துவ ஞானி) தந்த தத்துவ பூமி தமிழகம். தன்னை சிலுவையில் அரைந்த மக்களைப் பார்த்து பரிதாபப்பட்ட இயேசுநாதருக்கு முன்பே "இன்னா செய்தாருக்கும் இனியவே" செய்யும் சான்றாண்மை பகன்ற நாடு தமிழ்நாடு. ஆனால் வெற்றுச் சடங்குகளை தமிழர்களின் பண்பாடாக மாற்ற முற்படும் நிகழ்கால நிகழ்வுகள் வேதனையளிக்கிறது. ஏறு தழுவுதல் தமிழர்கள் கொண்டாடிய விளையாட்டாக இருந்திருக்கிறது. இவ்விளையாட்டின் மூலம் வீரத்தை க

குடிஅரசு-​தொகுப்பு

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

எது பார்ப்பனியம்? -

விவரங்கள் எழுத்தாளர்:  நா.வெங்கடேசன் தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  கட்டுரைகள்   வெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016 ஆரியக் கொள்கையான பார்ப்பனியம் இம் மண்ணின் மக்களைக் கூறு போட்டது. நால்வர்ணம் என்ற பெயரில் மக்களைப் பிளவு படுத்தியது. ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக நீதிகள் உருவாக்கப்பட்டது. அந்த நீதியை காப்பாற்றாத வர்ணத்தவனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. பெண்கள் பொருள்களாகப் பார்க்கப்பட்டனர். பெண்ணுரிமை மறுக்கப்பட்டது. ஒவ்வொரு வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. இவைகளே இன்றளவும் பார்ப்பனியத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. அப்பார்ப்பனியம் சுமந்துவரும் பாவ மூட்டை. பார்ப்பனியம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்களால் எதிர்க்கப்பட்டு வரும் சித்தாந்தம். சமூக சீர்திருத்தவாதிகளால், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்களால், பொதுவுடமைக்காரர்களால், பகுத்தறிவுவாதிகளால் தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்துவருவது பார்ப்பனியம். மேலும், பார்ப்பனியம் சமயச்சான்றோர்களான திருமூலர், வள்ளலார், நாராயணகுரு, அய்யாவைகுண்டர் போன்றவர்களாலும