இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுகை மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்

படம்
பேராவூரணி அருகே உள்ள சீவன்குறிச்சியைச்  சேர்ந்த ஜவுளி வியாபாரி நா.து. நாகலிங்கம் (73). வயது முதிர்வின் காரணமாக  செவ்வாய்க்கிழமை    மாலை காலமானார்.  நாகலிங்கத்தின் விருப்பப்படி  அவரது உடலை தானம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.  அவரது உடலுக்கு புதன்கிழமை  அஞ்சலி செலுத்திய உறவினர்கள்,  பின்னர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் ஒப்படைத்தனர். தந்தையின் உடலை தானம் செய்த நாகலிங்கத்தின் பிள்ளைகளுக்கு முதல்வர் மீனாட்சி சுந்தரம் நன்றி தெரிவித்தார். நாகலிங்கத்திற்கு மனைவி நா. தேவகி,  மகன்கள்  நா. பாலசுப்பிரமணியன், நா. முருகேசன்,  பேராவூரணி தமிழ்ப் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன் மற்றும் மகள் மங்கையர்க்கரசி ஆகியோர் உள்ளனர்.