இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வறியார்க்கொன்று ஈவதே ஈகை!

படம்
வறியார்க்கொன்று ஈவதே ஈகை! --------------- பேராவூரணி பேருந்து நிலையத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருகிறார் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் வன்மீகநாதன். ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பசி எல்லா உயிர்க்கும் பொதுவானது.  அதை அறிவதே ஒத்ததறியும் உயர் பண்பாகும் மற்றவர்களின் பசிப்பிணியை போக்குவதை மிக உயர்ந்த அறமாக திருக்குறள் போற்றுகிறது. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. வறியவர்களுக்கு பசிப் பிணியை நீக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் உலகைப் படைத்தவனின் கருவூலத்தில் சேமிக்கிறார்கள் என்கிறார் வள்ளுவர். ஏழைகளுக்கு உணவளிப்பது கடவுளுக்கு கடன் கொடுப்பதற்கு சமம் என்கிறது திருவிவிலியம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமகனார் வகுத்தளித்த அறம் பசிப்பிணி போக்குவது. சமயங்கள் கடந்து சான்றோர்கள் போற்றும் ஒப்பற்ற பணி சாப்பிடக் கொடுப்பது. பெரும் தனவந்தர்களும் அரசும் செய்யவேண்டிய அரும்பெரும் பணியை கங்க

அருந்தமிழ் மருத்துவம் 500

படம்
அருந்தமிழ் மருத்துவம் 500 சித்த மருத்துவர் பக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா. மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம் குரலுக்கு தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு தாமரைப்பூ சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள் காய்ச்சலுக்கு நிலவேம்பு விக்கலுக்கு மயிலிறகு வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர் நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர் வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ வ

எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்: தங்கர் பச்சான்

படம்
எங்கள் உயிரை காப்பாற்றுங்கள்: தங்கர் பச்சான் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மத்திய மாநில அரசுகளை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ----- அதில், “சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் என்னும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது. இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும்படி நிகழ்ச