இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

​பேராவூரணி அரசு கல்லூரிக்கு ​மேனாள் அ​மைச்சர் எம்.ஆர்.​கோ​வேந்தன் ​பெயர் ​வைத்திட வலியுறுத்து​வோம்.

படம்
​பேராவூரணி அரசு கல்லூரிக்கு  எம்.ஆர்.​கோ​வேந்தன்  ​பெயர் ​வைத்திட  வலியுறுத்து​வோம். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் மாண்புமிகு எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள்.  அவர் அ​மைச்சராக  இருந்த  காலத்தி​லே​யே  ​பேராவூரணி பகுதிக்கு  கல்லூரி  அ​மைக்க​வேண்டும் என்ற  ​பேராவா  ​கொண்டிருந்தார். ஐயா அவர்கள் பிறந்த முடச்சிக்காடு பகுதியி​லே​யே ​ பேராவூரணி அரசு கலைக்கல்லூரி  தொடர்ந்து ​செயல்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது​.  இந்நி​லையில் ​​பேராவூரணி வளர்ச்சியில்  ​பெரும்பங்கு  ​கொண்ட ​எம்.ஆர்.​கோ​வேந்தன்  அவர்களின்  ​பெய​ரை  இக்கல்லூரிக்குச்  சூட்ட​வேண்டும் என்று  ​மெய்ச்சுடர்  சார்பில் ​கோரிக்​கை ​வைக்கி​றோம்.  எம்.ஆர்.கோவேந்தன் அவர்களின் சீரிய முயற்சியால்தான் பேராவூரணி தொகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தொகுதி வளர்ச்சி கண்டது. பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து பேராவூரணியைப் பிரித்து பேராவூரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை, விரிவாக்கப்பட்ட பேருந்து நிலையம், தீயண

இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் !

இந்திய ஒன்றியம் முழுவதும் வேண்டாம் ! தமிழ்நாட்டில் மட்டும் போதும் ! தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் படிவங்கள். தமிழில் தகவல்கள் தாருங்கள் ! தமிழ்நாட்டில் அனைத்து வங்கிகளிலும் தமிழில் படிவங்கள், தகவல்களைத் தாருங்கள் ! தமிழ்நாட்டில் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களை, படிவங்களை, பத்திரங்களைத் தமிழில் தாருங்கள் ! தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் (அனைத்து சமயக் கோவில்களிலும்) தமிழில் மட்டுமே பூசனைச் சடங்குகளைச் செய்திடும் சட்டத்தைத் தாருங்கள் ! தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களில் தமிழில் மட்டுமே கல்வியை வழங்கிடுங்கள் ! தமிழ்நாட்டின் நீதி மன்றங்களில் தமிழில் வழக்குரைக்க நீதி வழங்க வாய்ப்பைத் தாருங்கள் ! தமிழ்நாட்டுக்கு தமிழ் இதழ்களை/ஊடகங்க ளை வழிநடத்த, உரிமம் வழங்க அனுமதி தாருங்கள் ! தமிழ்நாட்டுச் சச்சரவுகளைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள தமிழ் நாட்டில் உச்சநீதிமன்ற கிளையைத் தாருங்கள் ! தமிழ்நாட்டுக்குள் இயங்கும் அரசு அலுவலகங்களில் தமிழ் மக்களின் சேவைக்காக பணியமர்த்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழ்நாட்டில் தமிழில் நடத்

தினமணி (24.10.2015) திராவிட-ஆரிய மாயை! கட்டு​ரைக்கு மறுப்பு

இன்றைய தினமணி இதழில் (24.10.2015) பத்மன் என்பவர் எழுதிய திராவிட-ஆரிய மாயை என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. இதற்கு மறுப்பு ​தெரிவித்து எழுதப்படுகிறது இக்கட்டு​ரை இக்கட்டு​ரையில் திராவிட-ஆரிய இன வேற்றுமைகள் இல்லாததுபோல சித்தரித்து கட்டுரை எழுதியுள்ளார்.   கட்டுரையின் தொடக்கத்திலேயே இந்திய சமயங்களின் தொகுப்பிற்கு இந்து என்று பெயர் வந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்திய சமயங்கள் யாவும் இந்து மதத்திற்குள் இல்லை என்பதே உண்மை. பெளத்தமும் , சமணமும் இந்து சமயத்திற்குள் இல்லாமல் போய்விட்டதே ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்திய சமயங்களில் தொகுப்புகளுக்கு இந்து என்ற பெயரைக் கூறிக்கொண்டு இந்திய சமயங்களின் தனித்தன்மையை அழித்துவிட்டது என்பதுதான் இந்துமதத்தின் மீதான குற்றச்சாட்டாகும். இந்து மதத்தின் புனித நூலாக , இந்திய சமயங்கள் வழங்கிய குறிப்பாக சைவம் வழங்கிய சித்தாந்தத் திரட்டோ , பன்னிரு திருமுறைகளோ , ஆழ்வார்களின் பாயிரங்களோ புனித நூலாக இல்லாமல் பாகவத் கீதை மட்டும் எப்படி புனித நூலாக மாறியது என்பதுதான் இன்றையச் சிக்கல். " இந்து மதம் வேறு, தமிழர்கள் வேறு " என்று தமிழரிஞர்கள்