இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு!

படம்
தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிட ம் இ ருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு! தமிழ் மொழிக்காகவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் செயல்பலசெய்த சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் ஐயா காசிலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு கொத்தமங்கலம், வாடிமாநகர், பொது அரங்கில் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் மற்றும் அறமுரசு இயக்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு தோழர் குணசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஐயா காசிலிங்கம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசிய மருத்துவர் துரை. நீலகண்டன், "நாம் எல்லாவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகளையும், அமேரிக்காவையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம். குறிப்பாக நமது ஆட்சியாளர்கள் வெளிநாடுகளை சான்றாகக் காட்டி நம்நாட்டின் சுற்றுச்சூழல் குறித்து விரிவாகப் பேசி வருகிறார்கள். அந்நாட்டின் தொழில் நுட்பங்களையெல்லாம் நம் நாட்டில் நடை முறைப்படுத்திட முயலுகிறார்கள். ஆனால் வெளிநாட்டினர் த

தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை.

படம்
 தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை. தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் கொள்கை விளக்க உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில்,"கல்வியை ஒன்றியப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அனைத்தும் தமிழ் வழியில் நடைபெற வேண்டும். தமிழ்வழியில் கல்வியை வழங்காமல், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது பொருளற்றதாகிவிடும். எனவே அனைத்து துறைக் கல்விையும் தமிழ் வழியில் வழங்க அரசு முனைப்புகாட்ட வேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வழங்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். கல்வி மொழி, வேலை மொழி, தொடர்பு மொழி, அறமன்ற மொழி, ஆட்சி மொழி, அலுவல் மொழி, வழிபாட்டு மொழி என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை எட்ட தொடர்ந்து தமிழ்வழிக் கல்வி இயக்கம் செ

ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படம்
ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி குறித்த உயர்ந்த மதிப்பீட்டை சமூகத்தில் விதைக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் சொற்களால் அல்ல தங்களது செயல்பாடுகளால் பள்ளியின் மதிப்பை உயர்த்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. தாங்கள் பணியாற்றும் அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது என்பது ஒரு அறம். பேராவூருணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் காஜா முகைதீன் தனது பிள்ளையை தான் பணி செய்யும் அரசுப் பள்ளியிலேயே முதல் வகுப்பில், தமிழ்வழியில் சேர்க்கை செய்திருக்கிறார். இவ்வாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காஜா முகைதீன் தான் பணியாற்றும் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் சிறப்பாக பதிவிட்டு வருபவர். தான் பணியாற்றும் பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க தொடர்ந்து செயலாற்றி வருபவர். இந்நிலையில் இன்று தனது மகள் ஜுவைரியா வை தான் பணியாற்றும் பள்ளியில் சேர்க்கை செய்து இருப்பதன் மூலம் அரசுப்பள்ளி மீதான மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான நன்நம்பிக்கையை சமூகத்தில் விதைத்திருக்கிறார். தான் பண