இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோழர் ஆறு.நீலகண்டன் அவர்களுக்கு திசைகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது

படம்
  தமிழின மீட்பு, சமூக நீதி, பெண்ணுரிமை, மனித குல இழிவுகளுக்கு எதிரான மனித உரிமைச் செயல்பாடுகள், சூழலியல் பாதுகாப்பு, திருக்குறள் பரப்புரை என பன்முக ஆளுமை கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்... தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கொளக்குடி அமரசிம்மேந்திரபுரம் பகுதியில் நிலவி வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இழிவுகளை ஒழித்துக் கட்ட 2004 ஆம் ஆண்டு அப்பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி கோவில் நுழைவு போராட்டம் நடத்தி சிறை சென்றவர்... 1998 இல் குடிமனை நில மீட்பு போராட்டம் நடத்தி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரக்குடி மணக்காடு பகுதியில் 44 ஏழை எளிய குடும்பங்களுக்கு குடிமைப் பட்டா பெற்றுக் கொடுத்தவர்... பேராவூரணி நகர் பகுதியில் சூழ்ந்திருக்கும் பள்ளிகளையும் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பேராவூரணி பேரூராட்சி பகுதிக்குள் டாஸ்மாக் கடைகள் நடத்தக்கூடாது என்ற இவரின் வீரஞ்செறிந்த போராட்டம் காரணமாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மதுக்கடைகள் இல்லாத பகுதியாக மாறி நிற்கிறது... நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து உருவான பெரும் போராட்டக் கட்டமைப்புக்கு ஆதா

திசைகள் 18

படம்
அறந்தாங்கி திசைகள் அமைப்பின் பதினெட்டாவது ஆண்டு விழா நாளை அறந்தாங்கி நைனா முகமது கல்லூரி கலை அரங்கில் நடைபெற உள்ளது. மனிதத்தை உயர்த்தி பிடிக்கும் தோழமைகளால் கட்டமைக்கப்பட்டது திசைகள் அமைப்பு. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு 18 ஆண்டுகளில் சாதித்த செயல்கள் ஏராளம் ஏராளம். பல்வேறு சிந்தனைகளை கொண்ட பள்ளிப் பருவ நண்பர்கள் ஒன்று கூடி 18 ஆண்டுகள் சமூகப் பணிகளுக்காக பயணம் செய்ததே பெரும் சாதனை தான்.   சமூக நீதி சூழலியல்  கல்வி சுகாதாரம் பெண்ணுரிமை என்று ஐம்பெரும் கொள்கைத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்று கூடி பயணிக்கிறது திசைகள். ஐம்பெரும் கொள்கைகளை அனைவரிடமும் எடுத்துச் செல்வதோடு குறிப்பாக மாணவர்களிடம் இந்தக் கொள்கைகள் குறித்த புரிதலை உருவாக்குவதில் பெரும்பங்காற்றி வருகிறது. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்  செல்வச் செவிலியால் உண்டு என்ற திருக்குறளுக்கு ஒப்ப மாணவர்கள் மீது இந்த அமைப்பு கொண்ட அன்பை, அமைப்பின் தோழமைகள் தாங்கள் ஈட்டிய பெரும் செல்வத்தை மாணவர்களுக்காகவே செலவிடும் பண்பைக் கொண்டு அறி

பேராவூரணியில் தமிழறிஞர்கள் பெயரில் குடியிருப்புப் பகுதிகள் - 200க்கும் மேற்பட்டவர்கள் குடிமனைப் பட்டா பெற்று மகிழ்ச்சி

படம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் குடிமனை இல்லாத 227 ஏழைக் குடும்பங்களுக்கு குடியிருப்பு பகுதிகள் உருவாக்கப்பட்டு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் பயனாளர்களுக்கு குடிமனை பட்டாக்களை வழங்கி வருவாய்த் துறை அதிகாரிகளை பாராட்டிப் பேசினார். அவர் தனது உரையில், "ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இப்பகுதியில் தகுதியான பயனாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் உருவாக்கப்பட்டு மிகத் தரமான முறையில் குடிமனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள இது பெரிதும் உதவும். இந்த குடியிருப்பு வளாகங்களை உருவாக்கிட கடினமான உழைப்பை வழங்கிய பேராவூரணி வருவாய் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவைத் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பயனாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான குடியிருப்பு வளாகங்களை உருவாக்க பெரும் ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அனைவருக்கு

"ஓகப் பயிற்சி ஒரு சிகிச்சை முறை. நோய்களிலிருந்து விடுபடவும் நோயற்ற வாழ்வு வாழவும் ஓகப் பயிற்சி உதவுகிறது", பன்னாட்டு ஓகா நாள் விழாவில் மருத்துவர் நீலகண்டன் உரை

படம்
பேராவூரணி அமிழ் விளையாட்டுக் கல்விக் கழகம் "ழ" அறக்கட்டளையோடு இணைந்து நடத்திய ஓகா நாள் - ஓகப் பயிற்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஓகப் பயிற்சி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் மாணவர்களுக்கு ஓக முறைகளை விளக்கிக்கூறி பயிற்சி வழங்கினார். ஓகப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் துரை நீலகண்டன், "ழ"அறக்கட்டளை நிறுவனர் கார்க்கி அசோக்குமார், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சித. திருவேங்கடம், பேராசிரியர் பா. சண்முகப்பிரியா, ஆசிரியர் காஜா முஹைதீன், திருக்குறள் பேரவையின் செயலாளர் மெய்ச்சுடர் நா வெங்கடேசன் ஆகியோர் விளக்கிக் கூறினர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஓகப் பயிற்சி மேற்கொண்டனர். மருத்துவர் துரை. நீலகண்டன் கூறியதாவது... " ஓகப் பயிற்சி உடற்பயிற்சி மட்டுமல்ல இது ஒரு சிகிச்சை முறை. இந்த பயிற்சிகளை முறையாக செய்யும்பொழுது நீண்ட காலத்திற்கு இளமையோடு இருக்கலாம். பல்வேறு நோய்களிலிருந்தும் விடுபடலாம். நாள் முழுவதும் ஊக்கத்தோடு செயலாற்ற ஓகப் பயிற்சி உதவுகிறது" என்றார். நிகழ்வில் தோப்புக்கரணம் போடுவதன் நன்மைகள் குறித்து தோப்புக்கரண பயிற்சி