இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நாம் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம், பெண்கள் இன்னும் விழிப்புடன் இருக்கவேண்டும்!" காவல் ஆய்வாளர் செல்வி பேச்சு.

படம்
பேராவூரணி ஜெசிஐ - நாடி பவுண்டேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான ஐந்து நாள் இலவச கணினி பயிற்சியின் நிறைவு விழா பேராவூரணியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் தமது உரையில், "நாம் இன்னும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் மிகவும் சரியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நம் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள் பெற்றோர்கள்தான். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். பெண்கள் சுதந்திர உணர்வோடும் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவிகள் வாழ்வில் உயர்ந்த இலக்குகள் கொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி  பெண் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாடினார்.  பேராசிரியர் வேத கரம்சந்த் காந்தி, மெய்சுடர்  நா.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.  பயிற்சியில் பெற்ற அனுபவங்களை மாணவிகள் கூறினர். ச

சித்தாதிக்காடு ஆரம்பப்பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா

படம்
பேராவூரணி அருகே சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கோவி தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் சின்னப்பத் தமிழர் சிறப்புரையாற்றினார். தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். தாய்மொழிக் கல்வியில் பயின்று மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் மருத்துவர் துரை நீலகண்டன் தமிழ்வழிக் கல்வியின் அவசியம் குறித்தும், தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அவர் தனது உரையில்... "மெல்லத் தமிழினிச் சாகும் - என்று பாரதி கூறியதாக பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் பாரதி என்ன கூறினார் என்பதை முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்தமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்றந்தப் பேதை யுரைத்தான் இந்த வசை எனக்கெய்திடலாமோ? என பாரதி சொன்னதை நம்மில் பலபேர் சரியாகப் பொருள் கொள்ளாமல் , ஏதோ "தமிழ் இனி வாழாது "

உரிய இரயில்வே அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் வரை சொர்ணக்காடு பாலப் பணிகளை நிறுத்தி வைக்க முடிவு.

படம்
  பேராவூரணி நீலகண்டபுரம், கீழக்காடு மற்றும் சொர்ணக்காடு கிராமத்திற்குச் செல்லும் பாதைகளில் அமைந்திருந்த இரயில்வே கேட்டை எடுத்துவிட்டு, அந்தந்தப்பகுதியில் கீழ்ப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் பயன்படுத்தவே முடியாதபடி பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, மணக்காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டக் குழுவை ஒருங்கிணைத்து, கடந்த பிப்ரவரி 8 ஆம் நாள் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் ஆகியோர் பாலப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மக்களின் பயன்பாட்டுக்கு உதவாத வகையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதை உணர்ந்து போராட்டக் குழுவோடும் இரயில்வே அதிகாரிகளோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை 10.02.2022 இன்று நடைபெறும் வகையில் வருவாய்த்துறை மூலம் சொர்ணக்காடு, நீலகண்டபுரம், கீழக்காடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்க

மக்களுக்கான போராட்டமே வாழ்வு - உங்கள் வேட்பாளரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

படம்
பேராவூரணி பேரூராட்சியின் 14-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக மக்கள் வேட்பாளராக களத்தில் நிற்கிறார் தோழர் ஆ.நீலகண்டன். நமது மண்ணின் மைந்தரான இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்கான போராட்டத்திலேயே கழித்துவருகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? மக்களின் நல வாழ்வுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் முதல் குரலாக ஒலிப்பவர் தோழர் நீலகண்டன். எளிய மக்களின் கடைசிப் புகலிடமாக தோழர் வாழ்ந்து வருகிறார். பெண்களின் உரிமைகள், மாணவர்களின் உரிமைகள், அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, தமிழ் மொழி உரிமை காக்கும் போராட்டங்கள், தமிழர்களின் வாழ்வியலைக் காக்கும் போராட்டங்கள் என தனது வாழ்வை பொதுவாழ்வுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டு வாழ்பவர். நம் பகுதியின் மண் காக்கும் போராட்டமான நெடுவாசல் ஐட்ரோ கார்பன் எடுப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முன்பாகவே மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மூலம் வீதி வீதியாகச் சென்று பரப்புரையை மேற்கொண்டவர். கூடங்குளம் அணுவுலையின் அபாயம் குறித்து அணு அணுவாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று முழங்கியவர். நமது காவிரித் தாயின் மடியை பசுமைச் சூழலோடு பாதுகாக்கவும், வேளாண் மண

மருத்துவ மாணவர்களோடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

படம்
தனியார் கல்விக் கொள்கையால் கல்விச் சமத்துவம் சரிந்து வரும் சூழலில் சமூக நீதிக்கான பேராயுதமாய் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.  அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கைவசமாகி வருகிறது.  இந்த ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.  மருத்துவக் கல்வி மட்டுமின்றி அனைத்து உயர் கல்வியிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடுக்கடுக்காய் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எளிய குடும்பத்துப் பிள்ளைகளை ஏற்றம் காண செய்வதுதான் சமூகநீதி.  ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அரசே வழங்க வேண்டும்! அதில் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும்! தமிழ் வழியில் படித்தவர்கள் உயர்கல்வி என்னும் தேரில் வலம் வந்து வேலை வாய்ப்பைப் பெற்றிட வேண்டும். இதுவே தமிழ்நாட்டு அரசு தமிழர்களுக்கு செய்யும் கைமாறு.  வருகிற ஆண்டுகளில் கலை அறிவியல், பொறியியல், மருத்துவ துணை படிப்புகள் போன்ற அனைத்து உயர் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும