இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதிப் பெருமிதங்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவோம்

படம்
பொதுவெளியில் கட்டப்பட்டுள்ள  கோவில்களில் முதல் மரியாதை, ஜாதிய மண்டகப்படி,  பரிவட்டம் போன்ற பழக்கங்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.  -------------  இந்திய ஒன்றியம் ஒரு மக்கள் குடியரசு.   மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் நாடாளுமன்றம் மூலமாக இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெற்று வருகிறது.   மன்னர்கள் பராமரித்த கோவில்கள் மக்களாட்சியில் அரசு வசமானதற்கு பிறகு மக்கள் அனைவருக்கும் சமமான மரியாதையும் வழிபாட்டு உரிமையும் வழங்கப்பட வேண்டியதை அரசு உறுதி செய்ய வேண்டும்.   விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் குடியரசை நாம் உருவாக்கிய பிறகும் கோவில்களில் முதல் மரியாதை, பரிவட்டம், சாதிய மண்டகப்படிகள் போன்ற நடைமுறைகள் இருப்பது பெரும் சோகம். உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று அறிவித்துக் கொண்டு மன்னராட்சியின் பழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்வது, பண்ணை அடிமைச் சமூகத்தின் பழக்கங்களை பின்பற்றுவது ஏற்புடையதல்ல. பாரம்பரிய பண்பாட்டு பழக்க வழக்கங்களாக சமூக ஏற்றத்தாழ்வுகளை நடைமுறைப்படுத்துவது நாகரீகம் அடைந்த சமூகத்திற்கு ஏற்றதல்ல.   கோவில்களில் வளர்க

திருச்சிற்றம்பலம் சிறுவன் சதுரங்கப் போட்டியில் வாகை சூடி சாதனை

படம்
திருச்சிற்றம்பலம் ஷாலினி - இராமநாதன் அவர்களின் மகன் ஹரிஷ் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வாகை சூடி நம் பகுதிக்கு பெருமை சேர்த்துள்ளார். தஞ்சை சதுரங்க விளையாட்டுக் கழகம் அமைப்பின் பொன் விழாவை ஒட்டி மாநில அளவில் நடத்தப்பட்ட 8 இருந்து 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சதுரங்க போட்டியில் ஹரிஷ் பங்கேற்று வாகையர் பட்டம் வென்றுள்ளார். தனது தாய் ஷாலினி அவர்களிடம் தொடக்கத்தில் சதுரங்கத்தை கற்றுக் கொண்ட ஹரிஷ் தற்பொழுது ஒரு வருட காலமாக புதுக்கோட்டை முகமது ஷெரீப் அவர்களிடம் சதுரங்கம் பயின்று வருகிறார். ஹரிஷின் தந்தை இராமநாதன் மாலத்தீவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புனல்வாசல் டான் போஸ்கோ பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் "சதுரங்கத்தில் உலக சாதனை புரிய வேண்டும் என்பதே எனது ஆசை" என்கிறார். சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை அனாயசமாக கையாளும் ஹரிஷ் வீட்டின் வரவேற்பு அறையில் வெற்றி பதக்கங்கள் வரிசை கட்டி நிற்கின்றது. ஊரகங்களின் உட்பகுதிகளுக்குள் ஒளிந்திருக்கும் ஒப்பற்ற திறமைகள் வாய்ப்புகள் வசமாகும் போது வாகை சூடுகிறது என்பதை மெய்ப்பித்திருக்கிறார் ஹர

இழந்த பெருமையை மீட்டெடுக்கப் போராடி வருகிறது பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

படம்
பேராவூரணியின் பெருமைமிகு அடையாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இன்று பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படுவதற்கு முன்பு தன்னைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் விட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் அரவணைது வைத்திருந்தது பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. சுமார் 2000 லிருந்து 3000 மாணவர்கள், மாவட்டத்தில் தனக்கென மிகப் பெரிய விளையாட்டு மைதானம், பசுமையை அப்பிக்கொண்ட பள்ளி வளாகம் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாய் காட்சி தரும். ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை இலக்கிய மன்ற கூட்டம், விளையாட்டு நாள் விழா, ஆண்டு விழா, விடுதலை நாள் விழா குடியரசு நாள் விழா அனைத்தும் உயிர்ப்போடு நடத்தப்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் இலக்கு நோக்கி பயணித்தார்கள். ஆயிரம் ஆயிரம் காரணங்கள்... இழந்து போன பெருமையை இன்று மீட்டெடுக்க போராடி வருகிறது. பாழடைந்த பழைய கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது... பழைய கட்டிடங்கள் பழுதுபார்க்கப்பட்டு இருக்கிறது... பள்ளி வளாகம் எங்கும் பசுமையை போர்த்தும் வகையில் மீண்டும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்படுகிறது...

"நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்"

படம்
பெயரிலிருந்து திட்டத்தின் கருத்துரு வரை பெரும் விவாத பொருள் ஆகி இருக்கிறது தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம். கழிவறை இல்லை வகுப்பறை இல்லை போதிய இடவசதி இல்லை ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆய்வகங்கள் இல்லை நூலகம் இல்லை நூலகம் இருந்தும் பயன்படுத்துவதில்லை இப்படி ஏராளமான இல்லைகள் நிறைந்தது தான் அரசுப் பள்ளி.   பழைய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் ஆசிரியர்கள், காலமுறை ஊதியம் பெறும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் இல்லாத காலமுறை ஊதியம் பெறாத தொகுப்பூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், ஓய்வூதியமும் காலமுறை ஊதியமும் தொகுப்பூதியமும் இல்லாத பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஓய்வூதியமும் காலமுறை ஊதியமும் தொகுப்பூதியமும் இல்லாமல் ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் என பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஆசிரிய பட்டாளத்தோடு அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது.  மேலும் பி.எட் அல்லது டிடிஎட் படித்த  தகுதி தேர்வு  வருவதற்கு முன்பே பணிக்கு வந்த ஆசிரியர்கள்,  டி ஆர் பி நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் தகுதி தேர்

பனியோடு போராடி பள்ளிக்கு நிதி தந்த பொன்-காடு பள்ளி முன்னாள் மாணவர்

படம்
பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெரும் இட நெருக்கடியோடு பயணித்து வருவது குறித்து பலமுறை நம் தளத்தில் எழுதி இருக்கிறோம். பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் பெரு முயற்ச்சி எடுத்து வருகிறது. பள்ளி ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் கழகத்தின் இந்தச் செயல்பாட்டுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர், தற்போது தென்கொரியா நாட்டில் பணியாற்றி வரும் தோழர் சுரேஷ் அவர்கள் பள்ளிக்கு நிலம் வாங்க தனது இல்லத்தில் உள்ளவர்கள் மூலம் முதற்கட்டமாக ரூ.5000-ஐ பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா கணேஷ்குமார், துணைத் தலைவர் மருத்துவர் அருண் சுதேஷ் இவர்களிடம் வழங்கியுள்ளார். பெரும் பனிப்பொழிவில் போராடி சேர்க்கும் செல்வத்தை பள்ளியின் வளர்ச்சிக்காக பங்களித்தத சுரேஷ் அவர்களின் செயலை பெரும் நற்காரியமாக மெய்ச்சுடர் கருதுகிறது. ஆகச்சிறந்த அறமாக போற்றுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட தோழர் ஜோதிகா சூர்யா அவர்கள் "நாம் கோவில்

பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை தலையீட்டின் பெயரில் தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக சீர்கேட்டை சரி செய்து தருவதாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உறுதி.

படம்
பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வருவாய்த்துறை தலையீட்டின் பெயரில் தற்காலிகமாக ஒத்திவைப்பு. நிர்வாக சீர்கேட்டை சரி செய்து தருவதாக  இருதரப்பு பேச்சுவார்த்தையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் உறுதி. --------- பேராவூரணி அரசு மருத்துவமனை வட்டத் தலைநகரத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையை சுமார் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம மக்கள் நம்பி உள்ளனர். விபத்துகள், முதுமை, பல்வேறு நோய்கள், நாய்கடி, பாம்பு கடி, மகப்பேறு போன்ற மருத்துவ காரணங்குக்காக இந்த மருத்துவமனையை நாடி வருகின்றனர் ஏழைகள். மருத்துவமனை இருக்கு! சுகாதாரம் இல்லை... படுக்கை இருக்கு! கழிப்பறை இல்லை... மருத்துவர்கள் இருக்கிறார்கள்! மருந்து இல்லை... டிஜிட்டல் எக்ஸ்ரே இருக்கு! அதற்குரிய துணைக் கருவிகள் இல்லை... ஒருசில நேரங்களில் பணியாளர் இல்லை... அறுவை அரங்கம் உண்டு! மயக்க மருத்துவர் இல்லை... மகப்பேறு சிகிச்சை உண்டு! அல்ட்ரா ஸ்கேன் போன்ற கருவிகள் இல்லை... 24 மணி நேரமும் மருத்துவமனை திறந்திருக்கும்! ஆனால் முதலுதவிக்குத் தேவையான ரத்தம் மற்றும் சிறுநீர் ஆய்வக வசதிகூட 2

வயது ஏழு... படிப்பது இரண்டாம் வகுப்பு... நெடுந்தொலைவு ஓட்ட (மாரத்தான்) போட்டியில் 21 கிலோமீட்டர் ஓடி சாதனை!

படம்
வயது ஏழு...  படிப்பது இரண்டாம் வகுப்பு... நெடுந்தொலைவு ஓட்ட (மாரத்தான்) போட்டியில் 21 கிலோமீட்டர் ஓடி சாதனை!  ------------------------ ஊரகப்பகுதி எளிய மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி.  பேராவூரணி வட்டாட்சியர் வளாக விளையாட்டு திடலில் பயிற்சி மேற்கொண்டு வரும் சின்னஞ்சிறார்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறார் முதுநிலை விளையாட்டு ஆசிரியரான தோழர் மருத உதயகுமார். தொடங்கிய ஒரு மாதத்திற்குள் இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் 15 சிறுவர்கள் கீரமங்கலம் ஜே சி ஐ அமைப்பால் நடத்தப்பட்ட நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் தொடங்கி வைத்த இந்த போட்டியில் ரிஸ்வா என்கிற சின்னஞ்சிறு பாலகன் ஆண்களுக்கான போட்டி இலக்கான 21 கிலோ மீட்டர் தொலைவை தொட்டு சாதனை படைத்தான்.   இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து ஓட அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் ஆண்களுக்கான ஓட்ட இலக்கை அடைந்தான்.  பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

எளியவர்களுக்கு வாழ்வு தரும் வங்கி மேலாளர் ராகவன் சூர்யேந்திரன்

படம்
பேராவூரணி எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையின் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார் திரு ராகவன் சூர்யேந்திரன். வங்கிகளில் மேலாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் மனநிலையோடு பயணிப்பதை பார்த்திருக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவிற்கு அழைப்பதற்காக ஐயா ராகவன் சூர்யேந்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக பணி செய்யும் சராசரி மேலாளர்களையெல்லாம் தாண்டி சமூகப் பொறுப்புணர்வோடு அவர் உரையாடியது ஆச்சரியமாக இருந்தது. இலக்கியம் சமூகம் என பன்முக பார்வையோடு வங்கிப் பணி செய்வது அரிதிலும் அரிது. பதவியும் அதிகாரமும் பரிதவிக்கும் மக்களுக்கு பக்க பலனாக பணியாற்றுவதற்கு தான் என்ற சிந்தனையோடு செயலாற்றும் வங்கி மேலாளர். கடன் கேட்டு வங்கிக்கு வருபவர்களை "ஏமாற்று பேர்வழிகளை" போலவே பார்க்கும் மேலாளர்களுக்கு மத்தியில் அவர்களோடு உரையாடுகிறார். கடன் தேவை குறித்து வாடிக்கையாளர்களிடம் உளவியலாக இவர் நிகழ்த்தும் உரையாடல் பலரை வாழ்வித்திருக்கிறது. கல்விக்கடன் கேட்டு வரும் மாணவர்களிடம் வங்கிப் பயன்பாடு குறித்து இவர் நிகழ்த்தும் கலந்துரையாடல் மாணவர்களிடம் பெரும் பொறுப்புணர்ச்