இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

படம்
  பொலிவிழந்து வரும் மண் பானை தொழில் மனித நாகரிகத்தின் அடையாளம் உலகின் மூத்த தொழில் மண் பானை செய்யும் தொழில் தற்பொழுது நலிந்து வருகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பண்பாட்டு அடையாளமாக மண்பாண்டங்கள் இருந்து வருகிறது. கீழடி ஆய்வின் அடையாளமாக தமிழ் மொழியின் தொன்மத்தின் தரவுகளாக இன்றும் நம்மிடம் இருப்பது மண் பானை ஓடுகள்தான். சிந்து முதல் குமரி வரை தமிழர்களின் நாகரீக அடையாளமாக மண்பாண்டத் தொழில் இருந்து வருகிறது. தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மண் பானைகள் இல்லாமல் சிறக்காது. வேளாண் குடிகள் பொங்கல் வைக்கும் விழாவை மண்பானைகளை கொண்டே வைப்பார்கள். சாதாரண புழங்கு பொருட்களாக இருந்த மண்பானைகள் பொங்கல் விழாவின் அடையாளமாக மாறிப் போனது. காலப்போக்கில் அதுவும் மறைந்து வெவ்வேறு உலோகப் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கத்தால் மண்பானைகளில் புழக்கம் குறைந்து வருகிறது. மண் பானைகளின் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை சமகால தலைமுறை தெரிந்து வைத்திருந்தாலும் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில் பொங்கல் விழாவை மையப்படுத்தி நடைபெறும் சொற்பமான பானை செய்யும் தொழிலும் இந்த ஆண்டு மிகவும

என் பெயர் அபிநயா

படம்
என் பெயர் அபிநயா பெயர் அபிநயா தந்தை பெயர் ராமமூர்த்தி தாயின் பெயர் வாசுகி பாட்டியின் பெயர் பெரியநாயகி படித்தது குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம்  வகுப்பில் பள்ளியில் முதலிடம் விவசாயப் பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பில் முதன்மை பாடமாக எடுத்துப் படித்த இந்த பெண் கால்நடை மருத்துவம் படிக்க தீரா காதலோடு விண்ணப்பித்தார்.  சென்னை கலந்தாய்வில் கலந்து கொண்டு,  வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கொள்வதற்கான கடிதத்தையும் பெற்றுவிட்டார். மருத்துவர் கனவு பலித்துவிட்டது என்று மகிழ்ந்த அபிநயாவுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கலந்தாய்வுக்கு சென்று வரவே கந்து வட்டிக்கு கடன் வாங்கி சென்ற அந்தப் பெண் கல்லூரிக்கு கட்டணம் செலுத்த என்ன செய்வார்? பள்ளியில் முதலிடம் பிடித்து அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர்வதற்கு முடியாமல் கலங்கிய விழிகளோடு காத்திருக்கிறார். கஜாவால் காணாமல் போன குடிசையை சரி செய்ய வாங்கிய கடனையே, அடைக்க முடியாமல் அல்லாடுகிறது அந்தக்  குடும்பம்.  ஊடக வெளிச்சம் சென்று சேர முடியாத குக்கிராமத்தில் பிறந்தது இந்தப் பெண்ணின்