இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டும்! சான்றிதழ் வழங்கும் விழாவில் பேச்சு.

படம்
மார்ச் 30.  பேராவூரணி பாரதி மகளிர் தையல் பயிலகம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் அம்பேத்கர் நூலக வளாகத்தில் நடைபெற்றது.   பயிலகத்தில் பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா ஆகியோர் பயிற்சிச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது வாழ்த்துரையில், "தையல் கலை என்பது  மிகவும் நுணுக்கம் நிறைந்ததாகும்.  சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களால் தான் தையற்கலையை கற்றுக் கொள்ள முடியும்.  திரைப்படமும் சமூகமும் தையல் கலையின் சிறப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது.  இன்று நல்ல தையல் கலைஞர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளது.  பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற தான் மேற்கொள்ளும் தொழிலை மதிப்போடும், விருப்பத்தோடும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.   பயிற்சி மைய ஆசிரியர் நித்யா வரவேற்றார். நிறைவாக பயிற்சி மைய ஆசிரியர் உமா நன்றி கூறினார்.

பத்(க்)தி என்றாலும் ஒழுக்கம் தான்

படம்
எனது ஊர் ஆத்தாளூர்.  இங்கு அமைந்துள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.     இங்கு அமைந்துள்ள மரியம்பீவி அம்மாள் தர்கா தமிழ்நாட்டில் இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படும் ஆலயம்.   எங்கள் பேராவூரணி நகர் பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்ட பிள்ளையார் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.   வீரமாகாளி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நேரங்களில் பள்ளிவாசல் தெருவில் இருந்து நிறைய இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வந்து பட்டைச் சோறு வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன்.   உடல் நலம் இல்லாத இந்துக்கள் மரியம் பீவி அம்மாள் பள்ளிவாசலுக்கு சென்று பொட்டுக்கடலை சர்க்கரை படைத்து பாத்தியா ஓதி உண்பதை பார்த்திருக்கிறேன். பேராவூரணி திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் திருவிழா  நிகழ்ச்சிகள்  இங்குள்ள இஸ்லாமியர்கள் பங்களிப்போடு நடந்து வருகிறது.   திருநீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் தெருக்களில் இஸ்லாமிய பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி விழாக்களில் கலந்து கொள்வார்கள்.   "எனக்கு ஏன் நோன்பு கஞ்சி தரல?" என்று கேட்டு வாங்கிச் சாப்பிடும் பண்பாடு இங்குள்ள இந்துக்களிடம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

படம்
மார்ச் 25. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேராவூரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் கடைத்தெரு முழுவதும் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பரப்புரையில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில், பேராவூரணி வட்டாட்சியர் இரா.தெய்வானை, தேர்தல் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நாட்டு நலப்பணித்  திட்ட அலுவலர் முனைவர் சி.ராணி, கல்லூரி விரிவுரையாளர்கள் மு.பபிதா, மோகனசுந்தரம், வருவாய் அலுவலர் எஸ்.ஜெயதுரை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து வட்டாட்சியர் தெய்வானை மாணவர்களிடம் விளக்கி கூறினார். அனைவரும் வாக்களிப்போம், மக்களாட்சிக்கு மதிப்பளிப்போம் என்று மாணவர்கள் முழக்கமிட்டு பரப்புரை மேற்கொண்டனர்.

'உக்கி போடுதல்' உடற்பயிற்சியின் ஓர் அங்கம்! உலக சாதனை நிகழ்வில் தோப்புக்கரணம் மணிகண்டன் வலியுறுத்தல்!

படம்
பேராவூரணியில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.  18 நிமிடங்களில் 558 உக்கி போட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் தோப்புக்கரணம் பயிற்சியாளர் ஜெ. மணிகண்டன்.  தனது சாதனையை நிறைவேற்றிய பிறகு அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது, "சமய அடையாளமாகவும், தண்டனை குறியீடாகவும் கருதி வரும் தோப்புக்கரணம் என்ற 'உக்கி போடுதல்' உடற்பயிற்சியின் ஒரு அங்கம்.  தமிழர்களின் பழமையான ஓகக் கலையின் வடிவம்.  தமிழர்கள் சமயம் கடந்து இதை பின்பற்றி உடல் நலத்தோடு வாழ முற்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். திருநீலகண்ட பிள்ளையார் கோவில் விழா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைத்தார். அரங்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் தனது சாதனையை நிகழ்த்தி காட்டி உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார் மணிகண்டன். தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்தியில் இந்த பயிற்சி முறையை பரப்புரை செய்து வந்தார் மணிகண்டன்.  தான் எதேச்சையாக தொடங்கி பின்பு முறைப்படுத்தப்பட்ட முறையில் உக்கி போடத் தொடங்கியதற்கு பிறகு தனது உடல் நலனில் ஏற்பட்ட நல்ல முன்னேற்