இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்த்துச் சொல்வோம்...

படம்
வாழ்த்துச் சொல்வோம்... பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின் முகப்புச் சுற்றுச்சுவரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நெடுஞ்சாலை துறையினர் இடித்து விட்டனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இல்லாத சூழலில் பள்ளி செயல்பட்டு வந்தது. வெளிநபர்கள் பள்ளியின் கழிவறைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளி என்பதால் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களும் மாணவர்களும் கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருநாள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வகுப்பு நேரத்தில் கழிவறை செல்வதாக கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்து சாலையை பார்த்து இருக்கிறார். சாலையில் அந்த மாணவியின் உறவினர் யாரோ ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்து, விவரம் அறியா அந்தக் குழந்தை அந்த உறவினரை பார்த்துக்கொண்டே பெரியார் சிலை வரை சென்று விட்டார். ஆசிரியர்கள் உடனடியாக கவனித்து அந்த மாணவியை மீட்டு வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்ட செந்தில் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் க.நீலகண்டன் அவர்கள் பதறிப்போய் உடனடியாக பள்ளிக்கு ஒரு தற்காலிக கம்பி வே

பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை

படம்
  பேராவூரணி பகுதிக்கு போக்குவரத்து வசதி செய்துதரக் கோரிக்கை மக்களைத் தேடி முதல்வர் - பேராவூரணி சிறப்பு முகாமில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் தமிழ்வழிக் கல்வி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- பேராவூரணி வட்டார பொதுமக்கள் உரிய போக்குவரத்து வசதியின்றி இரவு நேரங்களில், வெளியூரிலிருந்து வரவும் வெளியூர்களுக்குச் செல்லவும் முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கு பகல் நேரத்திலும் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதன்காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை போன்ற நகரங்களுக்கு மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக பொதுமக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தனியார் வாகனங்களை அதிக வாடகைக்கு அமர்த்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. பலர் வசதியின்மை காரணமாக உயிரழக்கும் நிலையும் ஏற்படுகிறது. வெளியூருக்கு பணிக்குச் செல்பவர்கள் உரிய நேரத்தில் பணிக்குச் செல்லமுடியவில்லை, தொழில் காரணமாக வெளியூருக்கு பயனிப்பவர்கள் உரிய நேரத்தி

இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம்

படம்
 இருளர் வாழ்வின் வெளிச்சம் ஜெய்பீம் ஒரு நல்ல படைப்பின் நோக்கம் சமுதாயத்தில்  விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில் சிறு தாக்கத்தையேனும் ஏற்படுத்த வேண்டும். ஜெய் பீம் - இந்தத் திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. ஆனால் இருளர்களின் வாழ்வியல் சிக்கலோ அதையும் விட பெரியது.  தமிழ்ச் சமூகத்தில் தொல்குடி சமூகமான இருளர் வாழ்வியலை கண்முன் நிறுத்தி நீதி கேட்கிறது இந்த திரைப்படம்.  நீதியின் பார்வையில், காவல்துறையின் பார்வையில், ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல்வாதிகளின் பார்வையில், மார்க்சிய அரசியல் பார்வையில் என பன்முகப் பார்வையில் இந்த நாட்டின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது படம்.  புரையோடிய சாதிய வன்மம் எப்படி வர்க்க முரண்பாட்டை உருவாக்குகிறது என்பதை இயல்பாக உணர்த்துகிறது இந்தப் படம்.  "எந்த சாதியில்தான் திருடர்கள் இல்லை" வலிமையான வசனங்கள் வாழ்வியலோடு கலந்துள்ள  வன்மச் சிந்தனையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உயிர் காக்க நீதிமன்றத்தில் போராடும் வழக்கறிஞரின் வாதத்தையும், பாம்பு கடித்து உயிருக்காகப் போராடும் மனிதரைக் காக்கும் இருளரின் வாழ்வ

தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு!

படம்
தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை அயல்நாட்டினரிட ம் இ ருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் - ஆசிரியர் ந.காசிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் மருத்துவர் நீலகண்டன் பேச்சு! தமிழ் மொழிக்காகவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் செயல்பலசெய்த சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் ஐயா காசிலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு கொத்தமங்கலம், வாடிமாநகர், பொது அரங்கில் நடைபெற்றது. தமிழ்வழிக் கல்வி இயக்கம் மற்றும் அறமுரசு இயக்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு தோழர் குணசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஐயா காசிலிங்கம் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசிய மருத்துவர் துரை. நீலகண்டன், "நாம் எல்லாவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகளையும், அமேரிக்காவையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறோம். குறிப்பாக நமது ஆட்சியாளர்கள் வெளிநாடுகளை சான்றாகக் காட்டி நம்நாட்டின் சுற்றுச்சூழல் குறித்து விரிவாகப் பேசி வருகிறார்கள். அந்நாட்டின் தொழில் நுட்பங்களையெல்லாம் நம் நாட்டில் நடை முறைப்படுத்திட முயலுகிறார்கள். ஆனால் வெளிநாட்டினர் த

தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை.

படம்
 தொல்காப்பியம் தமிழரின் பெருமை - தமிழ்வழிக் கல்வி இயக்கக் கொள்கை விளக்கக்கூட்டத்தில் பேராசிரியர் கணேஷ்குமார் உரை. தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் நடைபெற்றது. மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பத்தமிழர் கொள்கை விளக்க உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில்,"கல்வியை ஒன்றியப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குள் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அனைத்தும் தமிழ் வழியில் நடைபெற வேண்டும். தமிழ்வழியில் கல்வியை வழங்காமல், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது பொருளற்றதாகிவிடும். எனவே அனைத்து துறைக் கல்விையும் தமிழ் வழியில் வழங்க அரசு முனைப்புகாட்ட வேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வழங்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். கல்வி மொழி, வேலை மொழி, தொடர்பு மொழி, அறமன்ற மொழி, ஆட்சி மொழி, அலுவல் மொழி, வழிபாட்டு மொழி என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை எட்ட தொடர்ந்து தமிழ்வழிக் கல்வி இயக்கம் செ

ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படம்
ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி குறித்த உயர்ந்த மதிப்பீட்டை சமூகத்தில் விதைக்க வேண்டியது மிகவும் அவசியம். வெறும் சொற்களால் அல்ல தங்களது செயல்பாடுகளால் பள்ளியின் மதிப்பை உயர்த்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. தாங்கள் பணியாற்றும் அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது என்பது ஒரு அறம். பேராவூருணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் காஜா முகைதீன் தனது பிள்ளையை தான் பணி செய்யும் அரசுப் பள்ளியிலேயே முதல் வகுப்பில், தமிழ்வழியில் சேர்க்கை செய்திருக்கிறார். இவ்வாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காஜா முகைதீன் தான் பணியாற்றும் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் சிறப்பாக பதிவிட்டு வருபவர். தான் பணியாற்றும் பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க தொடர்ந்து செயலாற்றி வருபவர். இந்நிலையில் இன்று தனது மகள் ஜுவைரியா வை தான் பணியாற்றும் பள்ளியில் சேர்க்கை செய்து இருப்பதன் மூலம் அரசுப்பள்ளி மீதான மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான நன்நம்பிக்கையை சமூகத்தில் விதைத்திருக்கிறார். தான் பண

விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர்

படம்
  விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர் ------------ பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் காஜா முகைதீன். ஆசிரியப் பணியின் மீது காதலோடு பணியாற்றி வருபவர். ஆசிரியர் பணியையும் தாண்டி சூழலியல் சார்ந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேரிடர் காலங்களில் தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் குடும்பங்களுக்கு உதவி செய்து வருபவர். இவரின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்பொழுது 120 மாணவர்களுக்கு மேல் படித்து வருகிறார்கள். ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் இருந்த இந்தப் பள்ளியை கஜா புயல் நிர்மூலமாக்கியது. துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக கொட்டகையை சீரமைத்து பள்ளியை தொடங்க பெரும் முயற்சி மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெரும் ஒத்துழைப்போடு இப்பொழுது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தனியார் பள்ளியையும் மிஞ்சும் வகையில் வண்ணமயமான வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இவர் நல்லாசிரியர் விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட தொகையை ஸ்மார

வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு.

படம்
  வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்குங்கள்! - திருவள்ளுவர் சிலை திறப்புவிழாவில் பாவலர் அறிவுமதி பேச்சு. பேராவூரணியில் மருத்துவர் துரை நீலகண்டன் தனது மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளார். இந்தத் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா 19.09.2021 அன்று நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் சிலையினைத் திறந்து வைத்தார். சிலை திறப்புவிழா நிகழ்வைத் தொடர்ந்து மருத்துவர் நீலகண்டன் எழுதிய தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல் என்ற நூல் வெளியீட்டு விழா அருகில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நூலினை வெளியிட தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணிநிறைவு பெற்ற பேராசிரியர் மருத்துவர் மு.குலாம்மொகிதீன் நூலினைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி விழாப் பேருரையாற்றினார். அவர் தனது உரையில்,"மருத்துவர் நீலகண்டன் அவரது மருத்துவமனையில் திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைத்ததுள்ளது வரலாற்றுச் சிறப்புக்கு உரியது. வாழ்க்கையை வள்ளுவனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வள்ளுவரிடம் இரண்டு அடி வாங்கவேண்