இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர் சேர்க்கைக்கு எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்வதில்லை! பள்ளியின் கல்விச் சூழல் மாணவர்களை ஈர்த்துள்ளது - பேராவூரணி வடகிழக்கு பள்ளியின் ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர் பேச்சு!

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.  வட்டார கல்வி அலுவலர் க.கலாராணி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில், "இந்தப் பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வரும் பள்ளியாகும்.  இங்குள்ள ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாட்டால் பள்ளியின் கல்விச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் மாணவர் எண்ணிக்கை இப்பள்ளியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இதனால் இப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கப் போவதில்லை.   மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட வசதியை இப்பள்ளிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.  போதிய இட வசதி இருந்தால் உரிய கட்டிட வசதியை உடனடியாக செய்து தர தயாராக உள்ளோம்.  மேலும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இன்னும் கூடுதலாக இரண்டு ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம். விரைவில் பள்ளி மாணவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்களின் செயல்பாடுகளும் போற்றுதலுக்குரியது", என்றார். ஆசிரியர்களின் சிறப்பான திட்டமிடலோட

கல்வி வாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் நன்றி உணர்வோடு செயல்பட வேண்டும் - பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தர் பேச்சு.

படம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றிய திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை, "உயர் கல்வி வாய்ப்பை பெற்ற மாணவர்கள் அதை உருவாக்கி தந்த தமிழ்நாட்டுக்கும், கல்வி வாய்ப்பை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க பெரும் முயற்சி மேற்கொண்ட பெரியவர்களையும் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.  முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்க  பெற்றோர்கள் மேற்கொண்ட தியாகத்தை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.   பெற்ற கல்வியின் நோக்கம் கடை நிலையில் உள்ள கிராமத்தாருக்கும் அதன் பலன் சென்று சேர வேண்டும் என்பதுதான்.   உயர் தொழில் நுட்பங்கள் ஊரகப் பகுதி மக்களுக்கும் சென்று சேர வேண்டும்.  உயர்வான வாழ்க்கை தரத்தை ஒவ்வொரு கிராம மக்களும் பெற வேண்டும்.  அதற்கு கல்வி வாய்ப்பை பெற்றவர்கள் பெரும் துணையாக நிற்க வேண்டும்.  ஊரகப் பகுதிகளின் வளங்களை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.  வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் வாழ்வியலை அமைத

"உறவுகளை மேம்படுத்துங்கள், கற்பனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்" போட்டித் தேர்வு பயிற்சி கூடத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் பேச்சு.

படம்
பேராவூரணி திருவள்ளுவர் கல்வி கழகம் மற்றும் நகர வர்த்தகர் கழகம் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் போட்டி தேர்வு பயிற்சி கூடத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா திருமலைச்சாமி தனது உரையில்," நமது வெற்றிக்கு பெரிதும் ஊக்கமாக அமைவது நல்ல வீட்டுச் சூழல். உறவுகளை மேம்படுத்தும் பொழுது வெற்றி எளிதாக அமைந்து விடும்.  அன்பான உறவுகளை கட்டமைக்கும் பொழுது போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றியைப் பெற வேண்டும் என்கிற மன உறுதி கிடைக்கும்.  உங்களின் மதிப்புமிகு உலகத்திற்கான கற்பனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.  கற்பனைகள் கனவுகளாக மாறும்.  கனவுகள் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.  குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உறவுகளை நேசிக்கத் தொடங்குங்கள்.  வெற்றிகள் வசமாகும்" என்றார் கல்விக் கழக பொறுப்பாளர் த. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெய்ச்சுடர் நா வெங்கடேசன் வரவேற்றார்.   பட்ட