இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"மனப்பொழிவின் மாய வாசனை" - போராட்டத்தில் பொழிந்த அன்பு

படம்
அன்புத் தோழர் ஷமீம் பானு இக்பால் எழுதிய "மனப்பொழிவின் மாய வாசனை" என்ற நூல் வாசிக்க நேர்ந்தது.   நோயோடு போராடும் அனுபவத்தை இருபது தலைப்புகளில் இயல்பாக பேசுவதுபோல் உரையாடியிருக்கிறார் பானு.   மருத்துவர்கள் நோய் குறித்து பேசுவதற்கும், ஒரு நோய்வாய்ப் பட்டவரே நோய்குறித்து பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது அரிது. பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை பக்கத்து வீட்டாரிடம்கூட பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பாடுகள் அதிகம். தமது இருப்பை, அடையாளத்தை, தலைமைப் பண்பை தலைகுப்புற கவிழ்க்கும் ஆற்றல் நோய்க்குண்டு. நோய் கண்டதும் பலர் காணாமல் போய்விடுவார்கள். நோய் தாக்கும் முன்பே எண்ணங்களால் மனம் தாக்குதலுக்கு உள்ளாகி மனம் துவண்டு போவார்கள். ஆற்றாமை ஆட்கொண்டுவிடும். தனிமை தள்ளாட்டத்தைத் தந்துவிட்டுச் செல்லும். சுமையாக உணர்வது பெரும் சுமையாகும். சுற்றங்கள் சூழ்ந்து கொள்கிறதா? அல்லது அன்னியப்படுகிறதா? என்பதெல்லாம் அறிந்து கொள்ளும் காலம் நோயுற்ற காலம்.   நோயுற்ற காலத்தின் மன உணர்வை எழுத்துக்களாக்கும் அளவுக்கு நம

பந்தய சைக்கிள் வாங்க முடியாமல் தவிக்கும் மாணவன்

படம்
சைக்கிள் பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம்! மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் சைக்கிள் இல்லாமல் தவிக்கும் பேராவூரணி அரசு பள்ளி மாணவர்! ------ இன்பன் கார்த்திக், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். பாபநாசத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார். சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இன்பன் கார்த்திக், சுயமாகவே பயிற்சி எடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு மூன்றாவது இடம் பெற்றவர். இவரின் ஆர்வத்தை கண்ட பள்ளி ஆசிரியர்கள் முறையான பயிற்சி மேற்கொள்ள வழிகாட்டி உள்ளனர். தற்பொழுது மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இன்பன் கார்த்திக், தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்து சுயமாக சைக்கிளிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிற்சி மேற்கொண்டு வரும் இன்பன் கார்த்திக் மாநில அளவில் நடத்தப்படும் போட்டியி

தீபாவளி

படம்
விழாவுக்கு விதவிதமான காரணங்கள் ஒவ்வொன்றும் முரண்பட்டு நிற்கின்றன நிலவின் நிலையற்ற காட்சிகளைக் கொண்டு நாள்களை வகைப்படுத்தி மறைநிலவன்று முன்னோர்களை நினைவு கூறும் வழக்கமாகக்கூட இருக்கலாம் பண்பாட்டுப் பழக்கத்திற்கு புதுக்கதை கற்பித்து பண்பாட்டை சிதைப்பதும் படுகொலைக்கு நிகரானது தான் படையல் இட்டு பழையனையும் பழைச்சியையும் நினைவு கூறும் நாளை கொண்டாட்டத்திற்கான காரணமாக மாற்றியதுதான் பண்பாட்டுச் சிதைவு பழக்கத்தை மாற்ற முற்பட்டு பண்பாட்டை சீரழிக்க நினைத்தவர்கள் கடைசியில் காரணத்தை மாற்றி கழுத்தறுப்பு செய்திருக்கலாம்.. முழுநிலவு நாளில் கொண்டாட்டமும் மறைநிலவன்று நினைவு கூறுதலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது தமிழ் நிலமெங்கும் வணிகம் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி தனதாக்கிக் கொள்ளும் ஆறாம் அறிவு கொண்டு நாம் ஆய்வு செய்வோம்

வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு

படம்
ஆசிரியர்களை மதிக்காத சமூகம் நெறி கெட்டுப் போகும் என்பது எவ்வளவு நிதர்சனமோ அதேபோல் மாணவர்களை மதிக்காத சமூகமும் அழிந்து போகும் என்பது பேருண்மை. வகுப்பறைச் சூழல்தான் வரலாற்றை எழுதுகிறது. வகுப்பறைக்குள் உருவாகும் சந்திப்புகள்தான் சரித்திரத்தில் பெரும் மாற்றங்களை செய்திருக்கிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு மலர்வதும், வளர்வதும் வகுப்பறைகளால் தீர்மாணிக்கப் படுகிறது. உணர்வுள்ள ஜீவன்களுக்குள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பு நிகழ்வது இங்குதான். இருளகன்று மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பது வகுப்பறைக்குள்தான். குற்றங்கள் களைந்து சுற்றம் சார்ந்து வாழும் சமூகங்கள் இங்கு உருவாக்கப்படுகிறது. வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும், பேரறிஞரும், அண்ணலும், அடிகளும் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். பகத்சிங் போன்ற புரட்சிப் பூக்கள் பரிணாமம் பெருவதும் வகுப்பறைகளில் இருந்துதான். அறம் செய்ய ஆற்றலை வளர்க்கும் இடம் வகுப்பறைகள். வித்தைகள் வசமாவதும், சிந்தனை விசாலமாவதும் வகுப்பறைகளுக்குள்தான். கற்பித்தல் மூலம் மனிதம் கருவாகி உருவாகும் கருவறை வகுப்பறைகள். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக

வரலாற்றை புனைவுகளில் தேடாமல் தரவுகளில் தேடுங்கள்!

படம்
கல்கி எழுதி வாசகர்களால் பெரிதும் போற்றப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாவல் திரைப்படமாக அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்று நாயகர்களை தனது கற்பனைப் புனைவுகளுடன் சேர்த்து வாசகர்களின் மனதில் காட்சிப்படுத்தியிருப்பார் கல்கி. நாவலில் வரும் பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் வாசகர்களை வசப்படுத்தியிருக்கும். எழுபது-எண்பதுகளின் வாசகர் வட்டம் பொன்னியின் செல்வன் வாசித்தவர்களை அறிவாளிகளாக அடையாளப்படுத்தியது. வார்த்தைகளைக் கோர்த்துக் காட்சிகளாக்கி கண்முன் ஓடவிட்டதுதான் கல்கியின் பேராற்றல். கண்முன் விரியும் காட்சிகளை உண்மையிலேயே கட்சிப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் பல பத்தாண்டுகளாகப் தமிழ் திரையுலக ஆளுமைகளால் பேசப்பட்டுதற்போதுனஅதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், வீராணம் ஏரி போன்ற வரலாற்றின் பேரடையாளங்களை விட்டுச்சென்ற பிற்காலச் சோழர்களின் கதையைச் சுற்றி எழுதப்பட்ட கல்கியின் கற்பனைப் பெருங்காப்பியத்தை காட்சிப்படுத்திய திரைப்படம் மனத்திரையின் எல்லையை சுருக்கிவிட்டது. வாசித்தவர்களை வசீகரிக்கவில்லை என்கிறார்