இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(?). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்ளது. தனியார் பள்ளிகளின் அசுரத்தனமாக வளர்ச்சியாலும், பெற்றோர்களின் தனியார்பள்ளி மோகத்தினாலும் வரக்கூடிய கல்வியாண்டுகளில் இன்னும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் சூழல்தான்தற்போதுள்ள நிலைமை. இதனால் மாணவர் எண்ணிக்கையற்ற பள்ளிகளுக்கு மூடுவிழா(!) நடத்த வேண்டிய நிலைதான்தொடரக்கூடும்.அரசுத் தொடக

கருத்தியல்.... பொருளியல்.....

கருத்தியல்.... பொருளியல்..... ------------------------------------------------------------- கற்பனையான விதிகளை அனுமானித்து நம்பி நடப்பது கருத்தியல் அனுபவ விதிகளை நம்பி நடப்பது பொருளியல் செயல்கள் நாடகமே... நாம் நாடக நடிகர்கள்.... ஒவ்வொரு விளைவுக்குமான காரணம் நம் கையில் இல்லை என நம்புவது கருத்தியல். ஒவ்வொரு செயலுக்கும் உரிய விளைவுகள் இருக்கும் என நம்புவது பொருளியல். கடவுள், வர்ணம், சாதி அடிப்படையில் செயல்புரியத் தூண்டும் சிந்தனை கருத்தியல் உழைப்பு உண்மையானது. விளைச்சல் உண்மையானது. உழைப்பையும் விளைவையும் எண்ணி செயல்புரிவது பொருளியல். அறிவினால் ஆணவத்தோடு செயல்படுவது கருத்தியல். அறிவினால் பிறர் துன்பம் துடைக்க ஓடுவது பொருளியல். இயற்கையை வழிபட்டு பயந்து நடப்பதும், இயற்கையை அழிக்க நினைப்பதும் கருத்தியல். இயற்கையை பாதுகாப்பது பொருளியல். அறிவியலால் இயற்கையை அழிக்கத் துடிப்பது கருத்தியல். அறிவியலால் இயற்கையைப் பாதுகாக்கத் துடிப்பது பொருளியல். கருத்தியல்படி செயல்படுவது பிராமணீயம் பொருளியல் படி செயல்படுவது தமிழியம், கருத்தியல் கோட்பாடு பகவத்க

பண்பாட்டு விழா​வைப் பாதுகாப்​போம்...

பண்பாட்டு விழா​வைப் பாதுகாப்​போம்... மஞ்சள் கொத்து , கரும்பு , பச்சரிசி , வெல்லம் , நெய் , புதிய மண் பானை , விறகு , மாவிலை , குருத்தோலை தோரணம் இவைகள்தான் பொங்கல் விழாவுக்கான குறைந்தபட்ச தேவை. இந்தப் பொருட்கள் தமிழகத்தில் அனைத்து ஊரகப்பகுதிகளிலும் மிகக் குறைந்த விலைக்கோ அல்லது விலையில்லாமலோ கிடைத்துவிடக்கூடியதாகும். இயற்கையையும் , முன்னோர்களையும் , கால்நடைகளையும் போற்றும் விழாவாக பொங்கல் விழா மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி விழா என்று கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வேறுபட்டது. இவ்விழா வெறும் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல அறுவடைக்குக் காரணமான இயற்கையை , இயற்கைகைக் காத்து நமக்களித்த முன்னோர்களை நன்றிப் பெருக்கோடு நினைவு கூறும் விழா. தமிழர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை உலகுக்குப் பறைசாற்றும் விழா. உழைப்பும் , நன்றி உணர்வும் தமிழர்களின் இரு கண்கள். இதை உணர்த்தும் விழாதான் பொங்கல் பெருவிழா. முதல்நாள் விழா போக்கிப் பொங்கல் , வீட்டை தூய்மைப் படுத்தி பொங்கல் விழாவுக்கு தயாராகும் விழா

தமிழர் திருநாளுக்கும் இந்துக்கள் பண்டிகைக்கும் உள்ள வேறுபாடு

படம்
தமிழர் திருநாளுக்கும் இந்துக்கள் பண்டிகைக்கும் உள்ள வேறுபாடு ------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழர் விழாக்கள் தமிழ் நாட்காட்டி அடிப்படையில் அமையும். இந்துக்களின் பண்டிகைகள் திதி அடிப்படையில் அமையும். தமிழர்கள் கொண்டாடும் தமிழர் திருநாள் தமிழ் நாட்காட்டியின் படி தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுவது. இந்த தை முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு போக்கித் திருநாள், பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று வகைப்படுத்தி இவ்விழா கொண்டாடப்படுகிறது.  இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள்  திதி அடிப்படையில் கொண்டாடப்படுவது.  இந்த திதி அடிப்படையில் அமைந்த விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் அது அவர்களின் விழாக்களாகாது. திதியின் அடிப்படையில் நாட்களை அனுசரிப்பது பிராமணீயக் கணக்காகும். இந்து மதத்தை உருவாக்கிய பிராமணர்கள் இந்துக்கள் பண்டிகைகளை திதிகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்டனர். இந்துக்கள் அல்லாத இந்தியாவின் 97 விழுக்காடு பெரும் பகுதி மக்கள் தங்களை இந்துக்கள் என்

மாணவர் சேர்ப்புக்கான கால நீட்டிப்பு...

படம்
பேராவூரணியில் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி - மாணவர் சேர்ப்புக்கான கால நீட்டிப்பு... பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையத்தில் நடைபெற்றுவரும் 2016-2017 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்ப்பு சனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் கல்வி மையம் பேராவூரணி வாரச்சந்தை எதிரில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் அறிவித்துள்ளபடி இளநிலை , முதுநிலை , பட்டயம் , சான்றிதழ் படிப்புகளுக்கான கல்வியாண்டு மாணவர் சேர்ப்பு சனவரி 31 வரை நீடித்து மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இப்பாடப்பிரிவுகளில் தற்போது சேர்ந்து படிக்கும் மாணவர்கள் வரும் மே மாதம் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை பேராவூரணியிலேயே எழுத முடியும். இங்கு சேர்ந்து பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு கல்விக்கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படியும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழிகாட்டப்படுகிறது.​மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப் பல்கலைக்கழக மைய ஒருங்கிணைப்பாளர் நா. வெங்கடேசனைத் தொடர்பு கொள்ளலாம்.