இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய திறனறித் தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

படம்
பேராவூரணி, தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.  என்.எம்.எம்.எஸ் தேர்வை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு தமிழக தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் பெற்றொர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேவேண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.   மன திறன் சோதனை (MAT) மற்றும் கல்வித் திறன் சோதனை (SAT) என இரண்டு பாடத்திட்டங்களில் இத்தேர்வு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 6695 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இறை...

எளிய மனிதர்களை, பெண்களை பட்டம் பெற வைத்தது திராவிட இயக்கம்! கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பேச்சு

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விழா அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளில் வெற்றி பெற்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற தகுதியான மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில்,  "எளிய மனிதர்களும் கல்வி கற்க வாய்ப்பளிப்பது தமிழ்நாடு. அதற்குக் காரணம் நீதிக்கட்சியும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை வழி நடத்திய திராவிட இயக்கங்களும் தான்.   மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளை படிப்பதற்கு சம்ஸ்கிருத மொழி தெரிந்திருப்பது அவசியம் என்ற நிலையை மாற்றியது நீதி கட்சி.   இன்று பேராவூரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் பட்டதாரிகளாக பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.   உயர் கல்விக்குப் பிறகு பட்டம் மேற்படிப்புகளை தொடர்வது அல்லது உரிய வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் அவசியம். அதற்குரிய வாய்ப்புகளை கல்லூரி உங்களுக்கு வழங்கி உள்ளது....