அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளின் நிலை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின்நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இதனால் இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையோடு செயல்படுகிறது(?). தமிழகத்தில் தற்போது உள்ளதைப் போல தொடக்கப்பள்ளி கட்டமைப்பு (அருகாமைப் பள்ளி கட்டமைப்பு) வேறு எந்தமாநிலங்களிலும் இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். காமராசர் போன்ற அறம் வளர்த்த அரசியல் தலைவர்களாலும், நே.து.சுந்தரவடிவேலு போன்ற அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவையாலும் வளர்ந்த அரசுத் தொடக்கப்பள்ளிகளின் நிலைஇன்று அவலத்தின் உச்சத்தில் உள்...
பொலிவிழந்து வரும் மண் பானை தொழில் மனித நாகரிகத்தின் அடையாளம் உலகின் மூத்த தொழில் மண் பானை செய்யும் தொழில் தற்பொழுது நலிந்து வருகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை பண்பாட்டு அடையாளமாக மண்பாண்டங்கள் இருந்து வருகிறது. கீழடி ஆய்வின் அடையாளமாக தமிழ் மொழியின் தொன்மத்தின் தரவுகளாக இன்றும் நம்மிடம் இருப்பது மண் பானை ஓடுகள்தான். சிந்து முதல் குமரி வரை தமிழர்களின் நாகரீக அடையாளமாக மண்பாண்டத் தொழில் இருந்து வருகிறது. தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா மண் பானைகள் இல்லாமல் சிறக்காது. வேளாண் குடிகள் பொங்கல் வைக்கும் விழாவை மண்பானைகளை கொண்டே வைப்பார்கள். சாதாரண புழங்கு பொருட்களாக இருந்த மண்பானைகள் பொங்கல் விழாவின் அடையாளமாக மாறிப் போனது. காலப்போக்கில் அதுவும் மறைந்து வெவ்வேறு உலோகப் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கத்தால் மண்பானைகளில் புழக்கம் குறைந்து வருகிறது. மண் பானைகளின் அருமை பெருமைகளை அதன் மருத்துவ குணங்களை சமகால தலைமுறை தெரிந்து வைத்திருந்தாலும் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில் பொங்கல் விழாவை மையப்படுத்தி நடைபெறும் சொற்பமான பானை செய்யும் தொழிலும் இந்த ஆண்டு மி...
பாலாபிசேகம் ஏன்? திருவிழாக் காலங்களில் கோவில்களில் பக்தர்களால் பால்குடம், பால் காவடி எடுக்கப்பட்டு கோவில் கருவறை மூலவர் சிலையில் பால் அபிசேகமாக ஊற்றப்படுகிறது . இன்றளவில் இப்படி பால் குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நேர்த்திக்கடன் என்ற பெயரில் இப்போது நடக்கும் இச்சடங்கின் உண்மைப் பொருளை சில பெரியவர்கள் கூறினார்கள். கோவிலில் சிலைகள் அமைக்கப்படும் போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைப்பர். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளைக் கொண்டு அபிசேகம் செய்வர். அது சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பட்டு கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகாலில் வடிந்து ஒழுகும். கோவில் சுற்றுப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் தொட்டியில் அபிசேகம் செய்யப்பட்ட பால் பொருட்களைப் பக்தர்கள் எடுத்து பருகுவர், அப்படிப் பருகுவதால் பல மருத்துவப் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இதுதான் சிலைகளில் அபிசேகம் செய்வதன் நோக்கம். இந்தப் பழக்கம் குறிஞ்சிப் பகுதியில் மலைகளில் உள்ள மூலிகைகளால் மருத்துவ குணம் கொண்டு பெருக்கெடுக்கும் அருவிகளைப் பார்த்...
கருத்துகள்
கருத்துரையிடுக