மெய்ச்சுடருக்கு அங்கீகாரம்

 

மெய்ச்சுடர் செயல்பாடுகளைப்  பாராட்டி திருக்கருகாவூர் அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை "அக்னிச் சிறகுகள்" என்ற விருதினை வழங்கி சிறப்பித்து இருக்கிறது. 


அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும்  ஆசிரியர்கள்,   உழவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்,   இதழாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.


2026 ஆம் ஆண்டுக்கான அக்னிச் சிறகுகள் விருதினை நமது மெய்ச்சுடர் இதழுக்கு வழங்கி சிறப்பித்து இருக்கிறது. 


மாண்பமை மாவட்ட நீதிபதி பரமசிவம் நாகராஜன்  மற்றும் பஞ்சலோக சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ தேவ ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.  


அக்னிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் கோ சிவசண்முகம்  நமது மெய்ச்சுடரின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.  


20 ஆண்டுகளுக்கு மேலாக சமூகம் சார்ந்து அனைவருக்கும்மான கல்வி, மது ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மக்கள் விரோத அரசின்  திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்,  மக்களின் வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்கள், பாதை மீட்பு, நில மீட்பு போராட்டங்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கொண்டாடுதல் என எழுத்தாகவும், செயலாகவும் களத்தில் நிற்கும் மெய்ச்சுடர் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக இந்த விருதினை நாம் கொண்டாடலாம். 


மெய்சுடருக்கு விருது வழங்கி சிறப்பித்த அக்னிச் சிறகுகள் அறக்கட்டளைக்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும்  அன்பும் வாழ்த்துகளும்.  


நம்பிக்கையுடன், 

ஆசிரியர், 

மெய்ச்சுடர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதைக்கும் பணியிடைப் பயிற்சி

பொலிவிழந்து வரும் மண் பானை தொழில்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?