மக்களைப் பேணும் மகத்தான பணி

அதிகாலை 5.30 மணியிலிருந்து பகல் 11 மணி வரை கடும் உழைப்பு...

ஒப்புயர்வற்ற சுகாதாரப் பணி...

வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து தெருவையே அழகாக்கி தேசப் பணி செய்கிறார் சகோதரி பிரியா.

பேராவூரணி நீலகண்டபுரம் மக்களின் நன்னம்பிக்கை பெற்ற பேராவூரணி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் இவர்.

யாரிடமும் அதிர்ந்து பேசியதில்லை.

எப்பொழுதுமே குப்பை மலையாக காட்சி தரும் ஜமால் மருத்துவமனையின் முன்புறம் இப்பொழுது மிகச் சுகாதாரமாக காட்சியளிக்கிறது.

இவரின் சிறப்பான செயல்பாடு இப்பகுதி மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.  யாரும் குப்பைகளைத் தெருவில் வீசுவதில்லை. வீட்டிலேயே சேகரித்து வைத்து காலையில் இவர் வந்ததும் கையிலேயே கொடுத்து விடுகிறார்கள்.

வாழ்த்துக்கள் சகோதரி!  உங்களின் ஒப்புயர்வற்ற பணியினால் இப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.  குரோனா மட்டுமல்ல எந்த ஆட்கொல்லி நோயும் இப்பகுதியை அண்டாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பால்குடம் எடுத்தல் (பாலாபிசேகம்) ஏன்?

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு