இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒளி! விழி!

படம்
  அகவை அதிகமாக அதிகமாக அனுபவம் அதிகமாகும்.  உள்ளுக்குள் அனுபவம் தரும் வெளிச்சம் விழிகளில் மங்கத் தொடங்கும்.   பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி ஆதரவோடு அரிமா சங்கம் நடத்தும் விழிகளில் ஒளியேற்றும் விழா மருத்துவ முகாமாக பேராவூரணியில் நடைபெற்று வருகிறது.   விநாயகா திருமண அரங்கில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முன் நின்று நடத்தியுள்ளது.   பேராவூரணி ஆசிரியர் ராமநாதன் அவர்கள் தலைமையிலான அரிமா சங்கத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஐயா ராகவன் சூரியேந்திரன் உள்ளிட்ட வங்கி நிர்வாகத்திற்கும் மெய்ச்சுடரின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். விழிகளுக்கு ஒளி கொடுப்போம் இருளுக்கு விடை கொடுப்போம்!  பார்வை குறைபாடு உள்ளவர்கள் குணம் பெற வாய்ப்பளித்த அரிமா சங்கமும் பாரத ஸ்டேட் வங்கியும் போற்றுதலுக்குரியது.

எண்ணும் எழுத்தும்

படம்
கல்வி பரவலாக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறியுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற நிலை தமிழ்நாட்டை தலை நிமிர வைத்திருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவை எட்டிப் பிடிக்கும் நிலையில் உள்ள அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஊரகப்பகுதி மாணவர்க​ளை உயர்கல்விக்கு தகுதிப்படுத்தி வருகிறது. கல்வி என்னும் அருமருந்து அறியாமை என்ற நோயை அறவே அகற்றியுள்ளது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புக​ளுக்கான அரசு உயர் கல்வி நிறுவனங்களில், அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்​பைத் ​தொடரமுடியாதபடி ஒன்றிய அரசு நீட், கியூட் போன்ற தகுதித் தேர்வைத் திணித்த பிறகும் தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கானதாகவே தொடர்ந்தது வருகிறது. அதற்குக் காரணம் கல்வி என்பதுதான் மாணவர்களை தகுதிப் படுத்த வேண்டும். கல்வியை பெறுவதற்கு ஏன் தகுதி தேர்வு? என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான் ​கேட்கிறது. நீட் என்ற தகுதி தேர்வை ​தொடர்ந்து எதிர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில வழியமைத்து ...

பேராவூரணி கிழக்குப் பள்ளியில் பரிசளிப்பு விழா

படம்
  17.03.2023 - மாலை 3.00 மணிக்கு நடைபெறும் விழாவுக்காக காலை முதலே ஆசிரியர்களும் மாணவர்களும் சணல் கயிற்றில் பசை தேய்த்து வண்ண வண்ண தாள்களை தோரணங்களாக ஒட்டிக் கட்டினர்.   பேரூராட்சி பெருமன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ் பள்ளி வளாகத்தின் மேடு பள்ளங்களை தனது மேற்பார்வையின் கீழ் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அழகு படுத்தினார். ஒலிபெருக்கி வந்ததும் ஒட்டுமொத்த பள்ளி குழந்தைகளுக்கும் குதூகலம் தொற்றிக் கொண்டது. விழா தொடங்குவதற்கு முன்பு ஒலிபெருக்கியில் வந்த பாடல்களுக்கு வகுப்பறைகளில் நடனமாடி மகிழ்ந்தனர் மாணவர்கள். கொரோனா கொடுந்துயர் கல்வித்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.   பள்ளிகளில் நடத்தப்பெறும் ஆண்டு விழாக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பெறவில்லை. கற்றல் செயல்பாடுகளை மீண்டும் மாணவர்களிடம் கொண்டு வருவதற்கே ஆசிரியர்கள் பெரும்பாடுகிறார்கள். சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர் விடுமுறை மாணவர்களின் மனநிலையை மாற்றி இருக்கிறது. அவர்களை திறன் சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு எண்ணற்ற பணிச்சுமை.   இதில் ஆண்டு விழாவை நடத்துவது என்பதெல்லாம் க...