இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆத்தாளூர் கல்வி வள்ளல் மு.அ.முத்துச்சாமி

படம்
ஆத்தாளூர், பேராவூரணி பேரூராட்சியின் ஒரு பகுதி.  புகழ் பெற்ற அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில், புகழ்பெற்ற மரியம்பீவி அம்மா தர்கா அமையப்பெற்ற ஊர்.   ஊரை சுற்றிலும் நீர் வழித்தடங்கள் அமையப்பெற்று அழகிய தீவு போன்று இந்த ஊர் காட்சியளிக்கிறது.  இயற்கை எழில் சூழ்ந்த ஊரகப் பகுதி.  பேரூராட்சியின் அங்கமாக இருந்தாலும் நகர வாசனை அற்ற ஊரகப் பகுதியாக இன்றும் காட்சி தருகிறது.   கல்வியாளர்களும், இலக்கியவாதிகளும், வேளாண் குடி மக்களும், உழைப்பாளிகளும் அமைதியாக வாழ்ந்து வரும் கிராமம்.  இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த தேசத் தலைவர்கள் பாடுபட்டு வந்தனர்.  தமிழ்நாட்டில் கல்வியை கடையனுக்கும் சேர்த்து விட வேண்டும் என்பதில் பெருந்தலைவர் காமராசரும் அதற்குப் பின் வந்த தலைவர்களும் செயல்பட்டனர்.  ஆத்தாளூர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மிகப் பாரம்பரியமிக்க பள்ளியாகும்.  இந்திய விடுதலைக்குப் பிறகு நம் பகுதியில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி.  1948 ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.   தொடக்கத்தில் கோவில் வளாகத்திலே...

அரசுப் பள்ளிக்கு உதவி

படம்
  தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறை பராமரிப்புப் பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.   தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிரலாளர் முனைவர் அகிலன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரிடம் பேராவூரணி பெண்கள் பள்ளியில் கழிவறைகளை மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேரன்-லட்சுமி பிரியா இணையர் தங்களது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினர்.  தன்னார்வலர்கள் சேரன், லட்சுமி பிரியா இணையர் வழங்கிய ரூபாய் 10,000, பள்ளி கழிப்பறை மேம்பாட்டுக்காக தலைமையாசிரியர் முனைவர் மேனகா அவர்களிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மகேஸ்வரி, கொடையாளர்கள் லட்சுமிபிரியா, சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு

படம்
தமிழ்நாடு அறக்கட்டளையின் "கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டம்" சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.   இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் முனைவர் க. இளங்கோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.  கந்தசாமி மாணிக்கம் - பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு (தலா ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை www.tnfindia.org என்ற அறக்கட்டளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், தமிழ்நாடு அறக்கட்டளை, எண் 27, டைலர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கு 15.09.2025 திங்கள் மாலை 5 மணிக்குள் கிடைக்கப்பெற வேண்டும்.

தேசிய திறனறித் தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

படம்
பேராவூரணி, தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.  என்.எம்.எம்.எஸ் தேர்வை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு தமிழக தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் பெற்றொர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேவேண்டும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.   மன திறன் சோதனை (MAT) மற்றும் கல்வித் திறன் சோதனை (SAT) என இரண்டு பாடத்திட்டங்களில் இத்தேர்வு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 6695 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இறை...

எளிய மனிதர்களை, பெண்களை பட்டம் பெற வைத்தது திராவிட இயக்கம்! கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பேச்சு

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விழா அரங்கில் நடைபெற்றது.  நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகளில் வெற்றி பெற்று இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற தகுதியான மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.  அவர் தமது உரையில்,  "எளிய மனிதர்களும் கல்வி கற்க வாய்ப்பளிப்பது தமிழ்நாடு. அதற்குக் காரணம் நீதிக்கட்சியும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை வழி நடத்திய திராவிட இயக்கங்களும் தான்.   மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளை படிப்பதற்கு சம்ஸ்கிருத மொழி தெரிந்திருப்பது அவசியம் என்ற நிலையை மாற்றியது நீதி கட்சி.   இன்று பேராவூரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் முதல் பட்டதாரிகளாக பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.   உயர் கல்விக்குப் பிறகு பட்டம் மேற்படிப்புகளை தொடர்வது அல்லது உரிய வேலை வாய்ப்புகளை பெறுவது மிகவும் அவசியம். அதற்குரிய வாய்ப்புகளை கல்லூரி உங்களுக்கு வழங்கி உள்ளது....

பள்ளிக்கு உரிய இட வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் - ஆண்டு விழாவில் மருத்துவர் பேச்சு

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. 150 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளி போதிய இட வசதி இல்லாமல் உள்ளது.   இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் துரை நீலகண்டன் கூறியதாவது,  "முன்பெல்லாம் நாம் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி விளையாடுவோம். பள்ளிகள் விளையாட்டு மைதானங்களோடு செயல்படும். இப்பள்ளி மிகுந்த இட நெருக்கடியோடு செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை விளையாட வாய்ப்பின்றி வளர்ப்பு பிராய்லர் கோழிகளை போல அடைத்து வைக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் இட வசதி உள்ளது. அரசும் அதிகாரிகளும் மனம் வைத்தால் உரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கெல்லாம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று எண்ணாமல் அரசு அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு கல்லூரிக்கு அரசு புறம்போக்கு நிலத்தை வழங்கியது போல இந்த பள்ளிக்கு ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.  ஆண்டு விழா, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்றது. ...

ஏழையின் கைகள்

குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய அமைப்புதான் ஏழையின் கைகள்.   இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வள்ளல்களின் கரங்களை கொண்டவர்கள்.  களத்தூர் ஆற்றங்கரை ஓரம் குடியிருப்பவர்கள் நீலகண்டன் மாலதி இணையர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.  இருவரும் தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.   மாலை 6 மணிக்கெல்லாம் இவர்கள் வீடு இருக்கும் பகுதியே கரும்கும் என்று இருக்கும்.  ஓடியாடும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயத்தோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.   இருள் சூழ்ந்த வீட்டுக்குள் சிமிலி விளக்குக்கு மண்ணெண்ணெய் கூட கிடைக்காமல் டீசலை ஊற்றி விளக்கெரித்து வாழ்ந்து வருகிறார்கள்.   "ஏழையின் கைகள்"  அமைப்பு இவர்களின் வீட்டுக்கு ஞாயிற்றின் ஒளியை பாய்ச்சி இருக்கிறது.  சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின்சாரம் இப்பொழுது இவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது.   "புதுசா கண்ணு கெடச்சது மாதிரி இருக்கு சார்" நீர் கசிய நா தழுதழுக்க பேசுவதற்கு தடுமாறுகிறார் மாலதி.  "பயலுக ரெண்டு ப...

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நாள் விழா நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுக்கோட்டை கவிஞரும், எழுத்தாளருமான ஆசிரியர் மைதிலி கஸ்தூரிரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், "தற்பொழுது நம்மில் பெரும்பாலானவர்கள் கைபேசிக்கு அடிமையாக இருக்கிறார்கள். ரீல்ஸ் போதையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். கைபேசியில் நாம் காணும் ரீல்ஸ் தொடர்ந்து நம்மை அதற்குள்ளேயே வைத்துள்ளது. ஒரு திரைப்படத்தை பார்த்தால் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிலிருந்து நம்மால் மீண்டு விட முடியும். ஆனால் இந்த ரீல்ஸ் நம்மை நாள் கணக்கில் அடிமையாக வைத்திருக்கிறது. இதனால் பார்க்கும் திறன் கேட்கும் திறன் படிப்படியாக குறைந்து செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ரீல்ஸ் பார்க்கும் மாணவர்கள் டைமர் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் கைபேசி பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பழக வேண்டும்.   குறிப்பாக பெண்கள் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதில் இருந்து விடுபட வேண்டும்.   தவறான பழக்கத்திலிருந்து இப்பொழுதே வெளி...

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பேராவூரணி ஒன்றிய பள்ளிகளின் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது

படம்
பேராவூரணி ஒன்றியத்தைச் சேர்ந்த, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேராவூரணி வடகிழக்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொன்னாங்கண்ணிக்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டாணிகோட்டை வடக்கு ஆகிய பள்ளிகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளிகளின் தேர்வு செய்யப்பெற்ற தலா 25 மாணவர்களுக்கு உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பெற்றது.  இந்த இயக்கம் சார்பில் பள்ளிகளில் தேர்வு செய்யப்பெறும் 25 மாணவர்களைக் கொண்டு பகிரி குழுக்கள் உருவாக்கப்பட்டு  திருக்குறள் பயிற்சி வழங்கப்படுகிறது.   மேலும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் வகையில் தயார் செய்து மாணவர்களை தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை பெற்றிட ஊக்கப்படுத்துகிறார்கள்.    அறம் சார்ந்த பொருள் வளமிக்க நல்லிணக்க சமுதாயத்தை கட்டமைக்கும் நோக்கத்தோடு பள்ளிகள் தோறும் திருக்குறள் புத்தகங்களை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. பேராவூரணி ஒன்றிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் பயிற்றுநர்கள் தஞ்சாவூர் அ.கோபிசிங் மற்றும் ஆனந்தி சரவணன் ஆகியோர் மாணவர்களுக்குப் புத்தகங்...

"உழைப்புக்கும் பண்புக்கும் கிடைத்த அங்கீகாரம்" தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருதாளரைப் பாராட்டிப் பேச்சு

படம்
பேராவூரணி, பெரியார் அம்பேத்கர் நூலகத்தில்  தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருது பெற்றுள்ள முடச்சிக்காடு முனைவர் அகிலன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.   முனைவர் அகிலன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரளாளராக பணியாற்றுகிறார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கம் முன்னெடுத்த இவ்விழாவில் திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன் தலைமை வகித்தார்.   பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் விருத்தாளரை வாழ்த்தி பேசினார். அவர் தனது வாழ்த்துறையில், "போற்றத்தக்க மனிதர் அகிலன்.  அவருக்கு விருது கிடைத்திருப்பது பொருத்தமானது.  படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அகிலனுக்கு அரசு கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்திட ஏற்பாடு செய்வோம்"என்றார். ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் எழுத்தாளர் வெ.நீலகண்டன், மருத்துவர் துரை.நீலகண்டன், குமுதம் டாட் காம் நேர்காணல் நெறியாளர் வளன்அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  சிறப்புரையாற்றிய வெ. நீலகண்டன் தனது உரையில், "அகிலன் முடச்சிக்காடு கிராமத்தில் படிக்கும்...