இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக்கு உரிய இட வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் - ஆண்டு விழாவில் மருத்துவர் பேச்சு

படம்
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. 150 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளி போதிய இட வசதி இல்லாமல் உள்ளது.   இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் துரை நீலகண்டன் கூறியதாவது,  "முன்பெல்லாம் நாம் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி விளையாடுவோம். பள்ளிகள் விளையாட்டு மைதானங்களோடு செயல்படும். இப்பள்ளி மிகுந்த இட நெருக்கடியோடு செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களை விளையாட வாய்ப்பின்றி வளர்ப்பு பிராய்லர் கோழிகளை போல அடைத்து வைக்கும் நிலை உள்ளது. பள்ளிக்கு அருகில் இட வசதி உள்ளது. அரசும் அதிகாரிகளும் மனம் வைத்தால் உரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கெல்லாம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று எண்ணாமல் அரசு அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு கல்லூரிக்கு அரசு புறம்போக்கு நிலத்தை வழங்கியது போல இந்த பள்ளிக்கு ஆலயத்துக்குச் சொந்தமான நிலத்தை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.  ஆண்டு விழா, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு பெரும் கொண்டாட்டமாய் நடைபெற்றது. ...

ஏழையின் கைகள்

குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய அமைப்புதான் ஏழையின் கைகள்.   இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் வள்ளல்களின் கரங்களை கொண்டவர்கள்.  களத்தூர் ஆற்றங்கரை ஓரம் குடியிருப்பவர்கள் நீலகண்டன் மாலதி இணையர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.  இருவரும் தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.   மாலை 6 மணிக்கெல்லாம் இவர்கள் வீடு இருக்கும் பகுதியே கரும்கும் என்று இருக்கும்.  ஓடியாடும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயத்தோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.   இருள் சூழ்ந்த வீட்டுக்குள் சிமிலி விளக்குக்கு மண்ணெண்ணெய் கூட கிடைக்காமல் டீசலை ஊற்றி விளக்கெரித்து வாழ்ந்து வருகிறார்கள்.   "ஏழையின் கைகள்"  அமைப்பு இவர்களின் வீட்டுக்கு ஞாயிற்றின் ஒளியை பாய்ச்சி இருக்கிறது.  சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மின்சாரம் இப்பொழுது இவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது.   "புதுசா கண்ணு கெடச்சது மாதிரி இருக்கு சார்" நீர் கசிய நா தழுதழுக்க பேசுவதற்கு தடுமாறுகிறார் மாலதி.  "பயலுக ரெண்டு ப...

"ரீல்ஸ் பார்ப்பதும் போதை தான்! மாணவர்கள் இந்த போதையில் இருந்து விடுபட வேண்டும்" கவிஞர் மைதிலி பேச்சு

படம்
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நாள் விழா நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுக்கோட்டை கவிஞரும், எழுத்தாளருமான ஆசிரியர் மைதிலி கஸ்தூரிரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், "தற்பொழுது நம்மில் பெரும்பாலானவர்கள் கைபேசிக்கு அடிமையாக இருக்கிறார்கள். ரீல்ஸ் போதையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். கைபேசியில் நாம் காணும் ரீல்ஸ் தொடர்ந்து நம்மை அதற்குள்ளேயே வைத்துள்ளது. ஒரு திரைப்படத்தை பார்த்தால் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிலிருந்து நம்மால் மீண்டு விட முடியும். ஆனால் இந்த ரீல்ஸ் நம்மை நாள் கணக்கில் அடிமையாக வைத்திருக்கிறது. இதனால் பார்க்கும் திறன் கேட்கும் திறன் படிப்படியாக குறைந்து செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ரீல்ஸ் பார்க்கும் மாணவர்கள் டைமர் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் கைபேசி பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பழக வேண்டும்.   குறிப்பாக பெண்கள் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதில் இருந்து விடுபட வேண்டும்.   தவறான பழக்கத்திலிருந்து இப்பொழுதே வெளி...